சவால்

629 22 3
                                    

👩‍❤️‍💋‍👨நீ தீயாய் இரு💜எனை திரியாய் தொடு 👩‍❤️‍💋‍👨

🤗 பகுதி 4

இரும்புத் துகள்.... காந்தத்தை நோக்கி செல்வதை போல.... தீரத்தன் அருகில் சென்ற தியாழினி....

தியாழினி - ஐ தீரா.... நீங்க எங்கேங்க இங்க... ஐயோ... உங்கள நான் இங்க பாப்பேன்னு நினைச்சு கூட பாக்கல.... என்றவள்... உரிமையாக தன் கரங்களை தீரத்தன் எதிரில் நீட்டியதும்..... சட்டென்று அவனும் அவள் கையை பிடித்து குலுக்கியவன்..

தீரத்தன் - தியா ....
நீ எப்படி தியா இங்க.... தம்பி எப்படி இருக்கான்.... உன் அப்பா நல்லா இருக்காரா...

என்று gap விடாமல் தீரத்தன் பேசுவதை பார்த்து சுற்றி இருக்கும் அனைவரின் கண்களும் ஆச்சரியத்தில் மிளிர காரணம்... இது வரை தீரத்தன் எந்த பெண்ணிடமோ... ஏன் ஆண்களிடம் கூட இவ்வளவு சத்தமாகவும் உரிமையாகவும் பேசியது இல்லை....

இல்ல தீரா.... அப்பா.... அப்பா இறந்துட்டாரு... நான் தம்பியை ஹாஸ்டல்ல சேர்த்து விட்டுருக்கேன்.... என்றவளின் கண்கள்... தன் தந்தையை நினைத்து கலங்கியது...

ஒ... sorry...என்றவன்... அப்போது தான் உணர்ந்தான்...அது வரை தியாவின் கரங்களில் இவன் கரங்கள் அகப்பட்டு இருப்பதை.....

அப்புறம்.. நீ எப்படி இந்த ஊருல.... என்றவன்.. நைசாக அவள் பிடியில் இருந்து தன் கையை விடுவித்து கொண்டான்...

இதோ... இவ என் பெரியம்மா பொண்ணு... பெயர் காமினி.... இவளோட friend யாரோ கோடிஸ்வரன் ரத்தன்..னாம்... அவர் பெரிய அப்பாட்டக்கர் போல... இந்த pub ல அந்த ஆளை மீட் பண்ணனும்னு சொல்லி இவ தான் என்னை இங்க அழைச்சிட்டு வந்தாள்....
என்று வெகுளித் தனமாக பேசும் தியாழினியை கண்டு வருணும் அருணும் உள்ளுக்குள்ளே சிரித்து கொள்ள..... தன்னை பற்றி தான் இவள் குற்றம் சொல்கிறாள் என்று அறிந்தும் அவள் பேச்சை ரசித்தப்படி நின்று இருந்தான் தீரத்தன்....

ஏய்.. இங்க என்னடி நடக்குது... உனக்கு இவனை தெரியுமா... என்று காமினி தீரத்தனை சுட்டி காட்டி கேக்க...

💞நீ தீயாய் இரு, எனை திரியாய் தொடு💞Where stories live. Discover now