அப்படி என்ன மா சொன்ன???

438 18 19
                                    

👩‍❤️‍💋‍👨நீ தீயாய் இரு💜எனை திரியாய் தொடு 👩‍❤️‍💋‍👨

🤗 பகுதி 22/23

கமலேஷ் வீட்டில் இருந்து.... தியாவை அழைத்து கொண்டு வெளியே வந்த தீரத்தன்.... Cab மூலம் தன் பங்களாவிற்கு சென்றான்...

வழியெல்லாம் தியாழினியின் கண்களில் கண்ணீர் வந்தபடியாக இருந்தது.... அவளை சமாதானம் செய்ய வழியின்றி தீரத்தன் அமைதியாக காரின் முன் இருக்கையில் அமர்ந்து இருக்க...

சில நிமிடங்களில் Cab.... தீரத்தன் வீட்டு வாசலை சென்றடைந்தது....
வாசலில் தவிப்புடனும் கண்களில் கண்ணீருடனும் நின்று இருந்த பொம்மி..... இவர்களை பார்த்ததும் வேகமாக அவர்கள் ஓடி வந்தவள்....

தியா தியா உனக்கு ஒன்னும் ஆகலையே.... தம்பி... உங்க அப்பா... உங்க அப்பா வந்து.. இங்க ஒரே பிரச்சனை பண்ணிட்டாரு ப்பா...அவரு இங்க வரும் போது தியா இங்க இருந்தாளா.... இவளை பார்த்ததும்...
"உன்னை அழைச்சிட்டு வந்து.... உன்கூட தீரத்தனுக்கு கல்யாணம் பண்ணி வச்சு.. அந்த கமல் என் கனவை தரைமட்டமாக ஆக்க திட்டம் போட்டு இருக்கானா....அவன் எதிரிலேயே இவள என்ன பண்ணுறேன்னு பாரு"..ன்னு சொல்லி உங்க அப்பா தியாவை எங்கேயோ கோவமா இழுத்துட்டு போனாரு ப்பா..... நல்ல வேள தியாவுக்கு ஒண்ணும் ஆகலையே, அதுவே எனக்கு போதும்...
என்று பொம்மி பெருமூச்சுடன் கண்கள் கலங்கினார்......

தீரன் - அம்மா.... தியாவுக்கு ஒண்ணும் இல்ல.... இவளை இழுத்துகிட்டு நேரா அப்பா கமல் வீட்டுக்கு தான் வந்தாரு...

பொம்மி - அவன் வீட்டுக்கு ஏன் போகணும்.... இங்க என்ன தம்பி நடக்குது...

தியா - அதே தான் ம்மா நானும் உங்ககிட்ட கேக்குறேன்... இங்க என்ன தான் நடக்குது... நான் உங்கள என் அம்மாவா தானே நினைச்சேன்... ஏன் என்கிட்ட இப்படி ஒரு பொய்யை சொன்னிங்க...

தீரன் - தியா.... இந்த பொய்களுக்கும், பொம்மி அம்மாவுக்கும் எந்த சம்மந்தமும் இல்ல.... நான் உனக்கு எல்லாத்தையும் விவரமா சொல்லுறேன்.... நீ கொஞ்சம் பொறுமையா இரு......

💞நீ தீயாய் இரு, எனை திரியாய் தொடு💞Where stories live. Discover now