யாரு தான் இந்த கமலேஷ்..?

498 15 4
                                    

👩‍❤️‍💋‍👨நீ தீயாய் இரு💜எனை திரியாய் தொடு 👩‍❤️‍💋‍👨

🤗 பகுதி 15

தியாழினி சிறு அச்சதுடன் வாசல் கதவை திறக்க..... அங்கே பொம்மியும் தீரத்தன்னும் நின்று இருந்தனர்..... அவர்களை பார்த்ததும்..... தியாவின் கண்கள் மகிழ்ச்சியில் மிளிர்ந்தது.....

என்ன தியா... நான் தனியா வராம பொம்மி அம்மாகூட தானே வந்து இருக்கேன்... இப்போ நீ என்னை வீட்டுக்குள்ள விடுவ இல்ல..... என்று தீரன் கேட்டதும்.....

நான் பேசுனத நீங்க தப்பா எடுத்துகிட்டீங்க போல..... பரவாயில்ல விடுங்க.... அம்மா உள்ள வாங்க... நீங்களும் உள்ள வாங்க தீரா... என்று தியா அழைத்தாள் ....

என்னமா தியா, ஆபீஸ் வேலை எல்லாம் உனக்கு பிடிச்சிருக்கா.... என்று கேட்டுக்கொண்டே பொம்மி வீட்டுக்குள் நுழைந்தார்....

ஹாங் ரொம்ப பிடிச்சி இருக்குமா....என்றவள் வாசலில் நின்று இருக்கும் தீரனை பார்க்க... அவனோ அங்கேயே நின்றப்படி...

அம்மா.... நீங்க இன்னைக்கு நைட் தியா கூட stay பண்ணுங்க.... நான் காலையில வந்து உங்கள பிக் up பண்ணிக்கிறேன்....என்றவனை..

தீரா.. உள்ள வாங்க... வந்து dinner சாப்பிட்டு போங்க.... என்று தியா கெஞ்சளாக அழைக்க....

its ok தியா.... நான் எங்க வீட்டுல போய் சாப்பிடுக்குறேன்... நீ இங்க தனியா இருப்பியேன்னு தான் அம்மாவை உனக்கு துணைக்கு அழைச்சிட்டு வந்தேன்...நீங்க சாப்பிட்டு தூங்குங்க.... நாளைக்கு நானே உன்னை வந்து ஆபீஸ்க்கு அழைச்சிட்டு போறேன்.... உனக்கு அதுவும் சரி வராதுன்னு feel பண்ணினா... நம்ம ஆபீஸ் cab ல கூட நீ வரலாம்.... எல்லாமே உன்னோட wish தான்... என்றவன்... வாசலில் நின்றப்படியே பேசினான்...

தம்பி.... தியா தான் உள்ள வர சொல்லுதே, வாயேன் பா.... வந்து உக்காந்துட்டு கொஞ்ச நேரம் பேசிட்டு போகலாம் இல்ல... இப்போ சீக்கிரமா வீட்டுக்கு போய் என்ன பண்ண போற... அந்த கமலேஷ் பையலும் வீட்டுல இல்ல... அருணும் வருணும் கூட திடிர்னு அவங்க அம்மா அப்பாவை பார்க்க துபாய்க்கு கிளம்பி போயிட்டாங்க...எப்படியா இருந்தாலும் நீ தனியா தானே இருக்க போற...
என்று பொம்மி தீரத்தனை வீட்டுக்குள் அழைக்கும் விதமாக சொன்னதும்... சில நொடிகள் யோசித்த தீரன் வீட்டுக்குள் வந்து சோபாவில் அமர்ந்தான்...

💞நீ தீயாய் இரு, எனை திரியாய் தொடு💞Where stories live. Discover now