இந்த புள்ள பூச்சி தொல்ல தாங்கல

397 18 3
                                    

👩‍❤️‍💋‍👨நீ தீயாய் இரு💜எனை திரியாய் தொடு 👩‍❤️‍💋‍👨

🤗 பகுதி 19

வாசு தேவன் - என்னடி உளர்ற....
இவன் என் மகனா...!?
என்றவன் கோவமாக பற்களை கடிக்க..... வித்தியா அம்மா என்னை தன் இதயத்தோடு இணைத்து கொண்டார்கள் ...

வித்தியா - ஆமா... உன் மகன் தான்....வேலைக்கு போன இடத்துல.... உன்கூட வேலை பார்த்த சின்ன பெண்ணை ஏமாற்றி.... அந்த ஊர் காரங்க உனக்கு 18 வயசு பெண்ணை கல்யாணம் பண்ணி வச்சி.... அவகூட நீ ஒழுங்கா வாழணும்னு கண்டிச்சதுக்கு பிறகு.... நீ அந்த பெண்ணை இந்த ஊருக்கு அழைச்சிட்டு வந்து... அவளை கொடுமை படுத்தி.... அவ நிறை மாசம் கர்ப்பிணியா இருக்கும் போது... என்னை கல்யாணம் பண்ணிக்க அவகிட்ட விவாகரத்து கேட்டு... அவ அதுக்கு சம்மதிக்கலன்னு சொன்னதும்.... அவளை எட்டி உதைத்து.... அவளை சாகுற நிலைமையில டிரைவர் மகாலிங்கம் அண்ணன்கிட்ட சொல்லி ஹாஸ்பிடல்ல சேர்த்து..... அவ கதையை அங்கேயே முடிக்க சொன்னியே.... அந்த புண்ணியவதி பெற்ற உன்னோட முதல் ஆண் பிள்ளை தான் இந்த கமலேஷ்...... என்று வித்தியா அம்மா.....என்னோட அப்பா அம்மா யாரென்று சொல்லும் போது... எனக்கு என் அப்பனை என் கையாலயே கொலை பண்ண வேண்டும் என்ற வெறி தான் வந்தது....

வாசு தேவன் - என்ன என் மகனா....
அப்போ இவனோட அம்மாவும் உசுரோடு தான் இருக்காளா...? ஏய் மகா லிங்கம்... எங்க டா இருக்க.... கூடவே இருந்துகிட்டு என் குடியை கெடுத்துட்ட இல்ல

வித்தியா - போதும் நிறுத்து..... மகா லிங்கம் அண்ணனை ஏன் திட்டுற.... நீ ஏவுன வேலையை எல்லாம் தட்டாமல் பண்ண மகாலிங்கம் அண்ணனுக்கு ஒரு உயிரை பலி கொடுக்க மனசு இல்லாம தான் உன்னோட முதல் மனைவியை மருத்துவ மனையில சேர்த்து அவளை காப்பாற்ற முயற்சி பண்ணிருக்காரு.... ஆனா பாவம் அந்த பொண்ணு... இவனை பெத்து போட்டுட்டு அவ போய் சேர்ந்துட்டாள்... எங்க இந்த பையன் உயிரோடு இருக்குறது உனக்கு தெரிய வந்தால் நீ இவனையும் கொலை பண்ணிட போறேன்னு தான் இவனை அவரே வளர்த்துக்கிட்டு இருக்காரு.... அன்னைக்கு கோவிலுக்கு போகும் போது....எதார்த்தமா இந்த பையனை நான் அவர்கூட பார்த்து என்ன ஏதுன்னு விசாரித்த போது தான் நீ பண்ண எல்லா அநியாயத்தையும் சொன்னாரு... ச்சீ என்ன மனுஷன் நீ..... என் சொந்த அண்ணனுக்கு நண்பனா என் வீட்டுக்குள்ள நுழைந்து... உனக்கு ஏற்கனவே கல்யாணம் ஆனதை மறைத்து... என்னை காதலிக்கிறதா சொல்லி நாடகமாடி.... என்னை வலுகட்டாயமா கோவிலுக்கு வர சொல்லி ..... வர வழியில ஹோட்டலுக்கு அழைச்சிட்டு போய்... எனக்கு மயக்கம் மருந்து கலந்த கூல் ட்ரிங்க்ஸை கொடுத்து... நான் சுய நினைவுல இல்லாத போது என்னை நாசமாக்கி... உன் பிள்ளையை நான் கருவுல சுமந்துகிட்டு இருக்கேன்னு தெரிந்து... என் அண்ணன் சேர்த்து வைத்த லட்ச கணக்கான பணம் நகைன்னு எல்லாத்தையும் எடுத்துக்கிட்டு வந்தா தான் என்னை கல்யாணம் பண்ணிப்பேன்... அப்போ தான் என் மகன் தீரா..வுக்கு அங்கீகாரம் கிடைக்கும்னு என் மூளையை சலவை செய்து.... உன் கையில கிடைத்த பொம்மை போல என்னை ஆட்டி வைத்து வேடிக்கை பார்த்தியே... நீயெல்லாம் என்னையா ஜென்மம் ச்சீ....

💞நீ தீயாய் இரு, எனை திரியாய் தொடு💞Wo Geschichten leben. Entdecke jetzt