அன்பை வெளிப்படுத்த தெரியாது அவளுக்கு
ஆனால் உணர வைக்க தெரியும்...செல்லம் கொஞ்ச தெரியாது அவளுக்கு
ஆனால் பார்வையில் கொஞ்சலை உணர்த்த தெரியும்..ஆசையாய் பேசத் தெரியாது அவளுக்கு
கண்டிப்பான வார்த்தையில்
அவளின் பாசத்தை
வெளிப்படுத்த தெரியும்...பிடித்ததை மட்டும்
கொடுக்கத் தெரியாது
அவளுக்கு
தேவை அனைத்தையும் அள்ளிக் கொடுக்கத் தெரியும்....தன் நலத்தில் சந்தோஷம்
காணத் தெரியாது
அவளுக்கு
பிள்ளைகள் நலத்தில் இன்பம் காணத்தெரியும்...தனக்கு மட்டுமாய்
வாழத் தெரியாது
அவளுக்கு
குடும்பத்தின் நலனுக்காய் உழைக்கத் தெரியும்...அன்னையென பூமியில்
வந்த தெய்வம் அவள்.....