எது கௌரவம்???

91 4 3
                                    

பொய்யாய் பேசி
பகட்டாய் வாழ்ந்து
சுயநலமாய் சிந்திந்து
பிறரை தாழ்வாய் நடத்தி
அடுத்தவர் மனம் வலிக்க
வாழ்வதில் இல்லை
கௌரவம்....

அன்பை மட்டுமே
பிரதானமாக்கி
நேர்மையாய் வாழ்ந்து
தன்னைபோல்
பிறரையும் எண்ணி
பொதுநலமாய் சிந்தித்து
தன் வாழ்நாளில்
எவர் மனமும் நோகடிக்காமல்
வாழ்வதில் தான் உள்ளது
பிறர் தம்மை மதிக்கும்
கௌரவமான வாழ்வு...

- நர்மதா சுப்ரமணியம்

Nammu KavithaigalWhere stories live. Discover now