காதலிசை

37 3 2
                                    

கான குயிலோசையாய் நீ
கான இன்னிசையாய் நான்

உன் குரலோடு
என் ஓசை இணையும் வேளையில்
என் மனம் மயங்கும் மாயமென்னவோ???

உன் பாடலின் உணர்ச்சியில்
நான் மெய்மறந்து
கிறங்கி போவதன்
காரணமென்னவோ????

நீ எனக்கே எனக்காய்
உருகிக்கரைந்து பாடுவதாய்
தோன்றும்
எண்ணமும் ஏனோ???

என் மனதினிசை
இன்னிசையாய்
உன்னை தீண்டவில்லையா???

என் பாடலின் உணர்வு
உன் உள்ளுணர்வை
தூண்டவில்லையா???

பிறரின் மனதை மயக்கும்
என் குரலில்
உன் மனம் மயங்கவில்லையா???

உன் மீதான என் காதல்
உனக்கு விளங்கவில்லையா???

பாடல் வரிகளாய் நீயும்
இசையாய் நானும்
காதலால் மனம் கவர்ந்து
நிறைந்து வாழ
காத்திருக்கிறேன்
கண்மணியே!!!!

-- நர்மதா சுப்ரமணியம்

Nammu KavithaigalWhere stories live. Discover now