பிரியாதே பைங்கிளியே
என்னை விட்டு...நொடிநேரம் பிரிந்தாலும்
தாங்கிடுமோ என் நெஞ்சமே..அடித்தாலும்
முறைத்தாலும்
என்னுடனேயே இருந்துவிடு
மான்விழியே...உன் முகம்
பார்த்துக்கொண்டே வாழும்
வரமொன்று மட்டும் போதுமே
என் வாழ்நாளை இன்பமாய்
கழித்திடுவேன் கண்மணியே....உன் ஓர விழி பார்வைக்காய்
ஏங்கித் தவித்துக் கொண்டிருந்தேனடி...உன் மொத்த காதலையும் எனக்கு
அள்ளித் தந்து
விலகி செல்ல துடிக்கிறாயே....என் உயிர் கரையுதடி
உன் உயிரை எண்ணி...மனம் ரணமாய் வலிக்குதடி
உன் வலியை எண்ணிவிட்டு சென்றால்
உடன் வருவேன் நானும்
உன்னுடன் உடன்கட்டை ஏறி....--நர்மதா சுப்ரமணியம்