தன் கதிரவன்
இருக்கும் திசை நோக்கி
வெட்கப் புன்னகை சிந்தி
அவன் பார்வையோடு
கலக்கும் சூர்யகாந்தி....இன்று
கதிரவன் தன்னை
ஸ்பரிசிக்காத தூறும்
ஓடிச் சென்று
ஒளிந்ததும் ஏனோ....இயற்கையின் விதி மாறியதும் ஏனோ????
கதிரவனின் காதலை
சூர்யகாந்தி உணரும் நாள் எதுவோ??கதிரவன்
அவள் மீதான தன் நேசத்தை
உணர்த்தும் நாளும் எதுவோ???காத்திருக்கிறோம்
சூர்யகாந்தி
தன் கதிரவனை
மகிழ்ச்சியோடு
தழுவும் நாளுக்காய்....