டீ ஷர்ட்டை போட்டு கொண்ட ஆதித்... உத்ராவை இருக்க கூறிவிட்டு கீழிறங்கி சென்றான்... வெளியே ஒரு இன்ஸ்பெக்ட்டரும் இரண்டு கான்ஸ்ட்டபெல்களும் ஒரு லேடி கான்ஸ்ட்டெபலும் இருந்தனர்... அவர்களருகிலே சசிக்கலாவும் இருந்தார்.... கதவை திறந்தவன் அவர்களை குழப்பமாய் பார்க்க...
ஆதித் : யாரு வேணும்...
இன்ஸ்ப்பெக்ட்டர் : நீங்க தான ஆதித்தன்...
ஆதித் : ம்ம் ஆமா... நீங்க எதுக்கு வந்துர்க்கீங்கன்னு தெரிஞ்சிக்கலாமா ஸர்...
இன்ஸ்ப்பெக்ட்டர் : மிஸ்டர் ஆதித்தன் யு ஆர் அண்டர் அரெஸ்ட்... என கைவிலங்கை தூக்கி காட்ட.... ஆதித்திற்கு சுர்ரென்று கோபம் ஏறியது... இருந்தும் அதை அடக்கி கொண்டு...
ஆதித் : எதுக்குன்னு தெரிஞ்சிக்கலாமா மிஸ்டர்... என அவரின் பெயரை கேட்க.... அதை சரியாய் புரிந்து கொள்ளாமல்...
இன்ஸ்ப்பெக்ட்டர் : உன் அதிகாரம் இந்த ஊர்ல வேணும்னா எடுபடும்... ஐம் அன் போலீஸ் ஆபீசர்... என் கிட்ட உன் திமிர காட்டாத என்ன.... வா போலீஸ் ஸ்டேஷன்க்கு...
ஆதித் : மிஸ்டர்... ரூல்ஸ் தெரியுமா தெரியாதா... ஒருத்தர அரெஸ்ட் பன்றதுக்கு ஒன்னு அவங்க தப்பு பன்னாங்கன்னு உங்க கிட்ட ஆதாரம் இருக்கனும்... இல்லனா சந்தேகத்துக்காக கஸ்டெடில எடுக்கனும்... அதுலையும் என்ன குற்றம்னு முதல்ல விவரிக்கனும்... வந்த உடனே அரெஸ்ட்டுங்க கூடாது...
இன்ஸ்ப்பெக்ட்டர் : போலீஸ் இன்ஸ்ப்பெக்ட்டர் என்ன விட உனக்கு சட்டம் நல்லா தெரியுமா.... வாய மூடிக்கிட்டு கூட வா...
ஆதித் : மிஸ்டர்... மரியாதை குடுக்க கத்துக்கோங்க... என்ன கேஸ்னு முதல்ல சொல்லுங்க....
இன்ஸ்ப்பெக்ட்டர் : நீ உன் வைஃப கோபத்துல மனுஷின்னு கூட பாக்காம அடிச்சு சித்திரவதை பன்னதா எங்களுக்கு கம்ப்லைன்ட் வந்துருக்கு என்றதும் ஆதித்தின் கண்கள் தானாகவே சிவப்பேற தொடங்கியது...
ஆதித் : வாட்.... யாரு எது சொன்னாலும் நம்பீடுவீங்களா... ஒரு ஆதாரம் இருக்கா உங்க கிட்ட நா என் வைஃப சித்திரவதை பன்றேன்னு....
YOU ARE READING
நீ என்பதே நான் என்கிற நீயே (முடிவுற்றது)
Romanceஹாய் இதயங்களே.... இது என் நான்காவது கதை.... கதையின் நாயகன்... சிரிப்பு என்றால் என்ன... என்று கேட்கும் குணமுடையவன்... ( கோவக்காரன்) கதையின் நாயகி ... பூ போன்ற மனம் கொண்டவள்... கோவமென்னும் முகத்திறையை வாழ்வில் என்றேனும் உபயோகிப்பவள்... வெவ்வேறு துருவங...