எதிர்பார்ப்பில்லாத
எதையும் பகிர்ந்துகொள்ளும்
இதயங்கள் கலந்த
உன்னத உறவு
நட்பு....நீ நான் எனவின்றி
நாம் எனக்கலந்த
நண்பர்கள் கூட்டமும்
எண்ணற்ற அரட்டைகளும்
எத்தனை சுகம்உதவிக்குப் பஞ்சமில்லையந்த
உலகினிலே...
பாசக்கயிற்றினால்
பிணைக்கப்பட்ட
பல தாய் பிள்ளைகள் நாம்ரத்த பந்தங்கள் போலல்ல
உற்ற சொந்தங்கள் போலல்ல
உயிரினில் கலந்த
உறவுக்கடலில்
சங்கமித்த நதிகள்...அலைகள் போல்
ஒயாத சுகங்கள்
புயல் போல்
சில நேரங்களில் சோகங்கள்எத்தனை புயல்களையும்
எதிர்க்கும் நண்பர்கூட்டம்
எமக்கு
இத்தினம் மட்டுமல்ல
எத்தினமும் நண்பர்கள் தினமே....****
YOU ARE READING
என் பாதை என் நியதி
Poetryமனதில் கவிதைகளாய் பிரவாகித்த எண்ணங்களின் தொகுப்பே இது. ஒரு மனிதனாய் எனக்குள் எழுந்த எண்ணங்களை கவிதைகளாய் கிறுக்கி வைத்திருக்கிறேன்.