இந்தப் பாதையில் நடக்கும்
ஒரு வழிப்போக்கன் நான்இது ஒரு முடிவை நோக்கிய பயணமே
இங்கு
என்னை முந்திச் செல்பவர்கள் பலர்
என் பின்னால் வருபவர்கள் பலர்
என் எதிரே வருபவர்கள் பலர்
என்னைத் தாண்டிச் செல்பவர்கள் பலர்
சில தூரம் என்னோடு வருபவர்கள் பலர்...
ஆனால்
இறுதிவரை செல்வது நான் மட்டுமேஇந்த மனித இனமே விசித்திரமானது
சிலர் சிரிக்க வைக்கிறார்கள்
சிலர் அழ வைக்கிறார்கள்
சிலர் இன்பம் கொடுக்கிறார்கள்
சிலர் இன்னல் கொடுக்கிறார்கள்
சிலர் துணைநிற்கிறார்கள்
சிலர் துரோகமிழைக்கிறார்கள்சுவாரசியங்கள் நிறைந்த இப்பயணத்தில்
என்னதான் நடந்தாலும் - அதை
சிறு புன்னகையுடன் கடக்க முயற்சிக்கிறேன்
ஏனெனில்
இங்கு நான் பார்க்கவேண்டியவை
இன்னும் எத்தனையோ இருக்கின்றன
இந்தப் பாதை முடிவதற்குள்
அவற்றையும் நான் அனுபவித்துவிட வேண்டுமல்லவா...****
YOU ARE READING
என் பாதை என் நியதி
Poetryமனதில் கவிதைகளாய் பிரவாகித்த எண்ணங்களின் தொகுப்பே இது. ஒரு மனிதனாய் எனக்குள் எழுந்த எண்ணங்களை கவிதைகளாய் கிறுக்கி வைத்திருக்கிறேன்.