2 முதல் சந்திப்பு
தங்களது இல்லத்தில் வெகுவாக *ட்ரெண்ட்* ஆகிக் கொண்டிருக்கும் அந்தப் பெண்ணைப் பார்க்க வேண்டும் என்று நினைத்தான் ஸ்ரீராம். அவள் அடிக்கடி அவர்கள் இல்லத்திற்கு வந்து செல்வாள் என்று அவன் எதிர்பார்த்தான். ஆனால் அவள், அவனது நினைப்பை பொய்யாக்கினாள். அதன் பிறகு அவள் அங்கு வரவேயில்லை. அப்படி இருந்த பொழுதும், அவனது குடும்பத்தினர் அவளை பற்றி பேசுவதை மட்டும் நிறுத்தவில்லை. ஒரு நாளைக்கு ஒரு முறையாவது அவளைப் பற்றி அவன் கேட்கத் தான் செய்தான். அன்றும் வித்தியாசம் அல்ல... ஸ்ரீராமின் அக்கா, நர்மதா தான் ஆரம்பித்தாள்.
"லட்சு, மிதிலா எப்படி இருக்காங்க?" என்றாள்.
"ஆமா, அவ எப்படி இருக்கா? ஏன் இப்பெல்லாம் நம்ம வீட்டுக்கு அவ வர்றதே இல்ல?" என்றார் பாட்டி.
"அவ ரொம்ப பிஸியா இருக்கா, பாட்டி" என்றான் லட்சுமன்.
"அவ வொர்க் பண்றா தான்... ஆனா, ஒரு ஞாயிற்றுக்கிழமைல நம்மளை வந்து பார்த்துட்டு போகலாமே?" என்றார் பாட்டி தண்ணீரை தம்ளரில் ஊற்றியவாறு.
சாப்பிடுவதை சில நொடி நிறுத்தினான் ஸ்ரீராம். அவள் வேலை செய்து கொண்டிருக்கிறாளா? எங்கு? என்ன வேலை? ஆனால், அதைக் கேட்க அவனது ஈகோ விட்டு விடுமா என்ன? அந்தப் பெண்ணைப் பற்றி பேசுபவர் பட்டியலில் இணைய அவன் விரும்பவில்லை.
"அவ ரொம்ப கவலையா இருக்கா பாட்டி. அவங்க கம்பெனி, நஷ்டத்துல ஓடிக்கிட்டு இருக்கு. அது சீக்கிரமே லாக்டவுன் ஆகும்னு நாங்க எதிர்பார்க்கிறோம்" என்றான் சோகமாக லட்சுமன்.
"அடப்பாவமே" என்றார் பாட்டி.
"எதுக்காக அவங்க கம்பெனி லாக்டவுன் ஆகப்போகுது?" என்றாள் நர்மதா.
"அவங்க பாஸ்க்கு உடம்பு சரியில்லாம போயிடுச்சு. அவருடைய பையனுக்கு, அவங்க அப்பாவுடைய பிசினஸ் ஃபீல்டு பிடிக்கல. அதனால இந்த பிசினஸை அவங்க இழுத்து மூடுறாங்க." என்றான் ஸ்ரீராமின் மற்றொரு தம்பியான பரத்.
YOU ARE READING
என்னை ஏதோ செய்து விட்டாள்...! ( முடிவுற்றது)✔️
Romanceஅவர்கள் பணத்தாலும் தகுதியாலும் நேர் எதிரான வித்தியாசம் கொண்டவர்கள். அவனுடைய கவனம் முழுவதும் பணத்தின் மீதும் கௌரவத்தின் மீதும் மட்டுமே... ஆனால் அவளோ, வாழ்க்கையின் சிறுசிறு சந்தோஷங்களிலும் நனைந்து திளைப்பவள்... அதீதமான கடவுள் நம்பிக்கை கொண்டவள்... மித...