48 பிரியாவின் திட்டம்
தனது தோழியுடன் அளவளாவிக் கொண்டிருந்த புஷ்பாவை தேடிக் கொண்டு வந்தாள் நர்மதா.
"சித்தி..."
பதட்டத்துடன் நின்றிருந்த நர்மதாவை பார்த்தவுடன், ஏதோ தவறு நடக்கிறது என்பதை புரிந்து கொண்டுவிட்டார் புஷ்பா. தனது தோழியிடமிருந்து விடை பெற்று வந்தார் அவர்.
"என்ன ஆச்சி, நர்மதா?"
"லயாவுக்கு ஆக்சிடென்ட் ஆயிடுச்சு"
அதைகேட்டு புஷ்பா அதிர்ச்சியனார். அவர்கள் பேசுவதை கேட்ட பாட்டியும் அங்கு வந்தார்.
"உனக்கு எப்படி தெரியும் நர்மதா?" என்றார்.
"அவங்க அம்மா எனக்கு ஃபோன் பண்ணியிருந்தாங்க. லயா நம்ம வீட்டுல இருக்கிறதா அவங்க நினைச்சுகிட்டு இருக்காங்க. அவளை நல்லபடியா பார்த்துக்க சொன்னாங்க. எனக்கு என்ன செய்யறதுன்னே தெரியல"
"நீ கவலைப்படாதே. நான் பரத்தையும், ப்ரியாவையும் அவளை பாத்துக்க அனுப்புறேன்"
"இல்ல சித்தி. அது நல்லா இருக்காது. அவங்க அம்மா நம்மளை பத்தி என்ன நினைப்பாங்க? நம்ம இங்க இருக்கோம்னு தானே அவங்க அவளை இங்க அனுப்பி வச்சாங்க? நம்ம அவளை நம்ம வீட்டை விட்டு துரத்திட்டோம்னு அவங்ககிட்ட சொல்ல முடியுமா? அவங்க வருத்தப்பட மாட்டாங்களா?"
"ஆனா, அவ ரொம்ப ஆபத்தானவ, நர்மதா" என்று எச்சரித்தார் புஷ்பா.
"இது, அதைப் பத்தி யோசிக்குற நேரமில்ல, புஷ்பா" என்றார் பாட்டி.
"பாட்டி சொல்றது சரி தான், சித்தி. நம்ம அவளை வீட்டுக்கு கூட்டிட்டு வர்றது தான் சரி"
"இரு நர்மதா... அவ ஸ்ரீராம்கிட்ட மட்டும் விளையாடல... மிதிலாகிட்டயும் விளையாடியிருக்கா... அவங்க ரெண்டு பேருக்கும் கல்யாணம் ஆகப்போகுது. இன்னும் கொஞ்ச நாள்ல மிதிலா நம்ம வீட்டுக்கு வரப் போறா. அவளுக்கும் ராமுவுக்கும் நடுவுல பிரச்சனையை ஏற்படுத்தின பொண்ண, நம்ம வீட்ல பார்த்தா அவ என்ன நினைப்பா?"
YOU ARE READING
என்னை ஏதோ செய்து விட்டாள்...! ( முடிவுற்றது)✔️
Romanceஅவர்கள் பணத்தாலும் தகுதியாலும் நேர் எதிரான வித்தியாசம் கொண்டவர்கள். அவனுடைய கவனம் முழுவதும் பணத்தின் மீதும் கௌரவத்தின் மீதும் மட்டுமே... ஆனால் அவளோ, வாழ்க்கையின் சிறுசிறு சந்தோஷங்களிலும் நனைந்து திளைப்பவள்... அதீதமான கடவுள் நம்பிக்கை கொண்டவள்... மித...