32 கல்லுக்குள் ஈரம்
வழக்கத்திற்கு மாறான அமைதியுடன் விளங்கியது பூவனம். இருப்புக் கொள்ளாமல் இங்குமங்கும் உலவிக் கொண்டிருந்தான் ஸ்ரீராம். மிதிலாவின் வார்த்தைகள், அவன் தலைக்குள் மீண்டும் மீண்டும் தாக்குதல் நடத்திக் கொண்டிருந்தன. அவனை திருமணம் செய்து கொள்ளமாட்டேன் என்று கூறுவதற்கு அவளுக்கு எவ்வளவு தைரியம்...! அவள் தைரியத்திற்கு என்ன குறை...! அவள் எப்போதுமே தைரியத்துடன் அவனை எதிர்த்து நிற்பவள் தானே...! எப்போது அவனைப் பார்த்து அவள் பயந்திருக்கிறாள்...? அவர்கள் சந்தித்த முதல் நாளிலிருந்தே, அவனை அவள் எதிர்த்து நின்று சமாளித்துக் கொண்டு தான் இருக்கிறாள்... ஏதோ ஒருவிதத்தில் இவனும் அவளால் கவரப்பட்டு கொண்டு தான் இருக்கிறான்... எல்லோரிடத்திலிருந்தும், எல்லாவற்றிலிருந்தும் அவள் ஒரு விதிவிலக்கு...
யாரோ கதவை திறக்கும் சத்தம் கேட்டு, தனது அறையின் வாசற்படியை பார்த்து நின்றான் ஸ்ரீராம். அவனைப் பார்த்தபடி உள்ளே நுழைந்தாள் நர்மதா. அவளைப் பார்த்தவுடன், சோபாவில் அமர்ந்து, கீழே பார்த்தபடி தன் கை விரல்களை கோர்த்துக் கொண்டான் ஸ்ரீராம், அம்மாவிடம் கோபத்தை காட்டும் சிறு பிள்ளையை போல, முகத்தை வைத்துக்கொண்டு. அவன் அருகில் வந்தமர்ந்தாள் நர்மதா.
"என் மேல நீ கோவமா இருக்க இல்ல?"
அவளுக்கு பதில் கூறாமல் அமைதியாக இருந்தான் ஸ்ரீராம்.
"எனக்குத் தெரியும் நீ கோவமா இருக்கேன்னு. உன்னை காயப்படுத்த நான் அப்படியெல்லாம் பேசல. இது வேற விஷயமா இருந்தா, நிச்சயம் நான் உனக்காகத் தான் போராடுவேன். அது உனக்கும் நல்லா தெரியும். ஆனா, மிதிலா விஷயம் வேற. அவங்க மனசுல, உன்னை பத்தின தப்பான அபிப்ராயத்தை நீயே தான் உருவாக்கிட்ட. இது அவங்களுடைய வாழ்க்கை... தனக்கு என்ன வேணுமுன்னு முடிவு எடுக்கிற எல்லா உரிமையும் அவங்களுக்கு இருக்கு இல்லையா...?"
அவள் பேசுவதை தடுத்து நிறுத்தி, ஸ்ரீராம் கூறிய வார்த்தைகள் நர்மதாவுக்கு திகைப்பூட்டியது.
YOU ARE READING
என்னை ஏதோ செய்து விட்டாள்...! ( முடிவுற்றது)✔️
Romanceஅவர்கள் பணத்தாலும் தகுதியாலும் நேர் எதிரான வித்தியாசம் கொண்டவர்கள். அவனுடைய கவனம் முழுவதும் பணத்தின் மீதும் கௌரவத்தின் மீதும் மட்டுமே... ஆனால் அவளோ, வாழ்க்கையின் சிறுசிறு சந்தோஷங்களிலும் நனைந்து திளைப்பவள்... அதீதமான கடவுள் நம்பிக்கை கொண்டவள்... மித...