72 மிதிலாவின் முடிவு
மிதிலாவை பாதுகாப்பாய் அணைத்தபடி தரையில் விழுந்து கிடந்தான் ஸ்ரீராம். தாக்குதல் நின்றுவிட்டது என்று நிச்சயமாய் தெரியும் வரை அவன் அப்படியே இருந்தான். அவன் அங்கிருந்து எழ முயன்ற பொழுது அவனை இறுக்கமாய் பற்றிக் கொண்டாள் மிதிலா.
"போகாதீங்க ஸ்ரீ, ப்ளீஸ்... " என்றாள் கெஞ்சலாக.
"நான் எங்கேயும் போகல
என்னுடைய மொபைலை தான் எடுக்க போறேன். அப்ப தானே நான் போலீசுக்கு கால் பண்ண முடியும்?""மறுபடியும் அவங்க சுட்டா என்ன செய்றது?"
"என்னோட ஃபோன் பெட் மேல தான் இருக்கு"
இங்கும் அங்கும் பார்த்தவள், ஸ்விட்ச் போர்டு இருக்கும் திசையை கண்டுகொண்டாள்.
"இருங்க... " என கூறிவிட்டு, ஸ்விட்ச் போர்டை நோக்கி மெல்ல தவழ்ந்து சென்று விளக்கை அணைத்தாள்.
கட்டிலில் தாவிய ஸ்ரீராம், தனது கைபேசியை எடுத்து, போலீசுக்கு ஃபோன் செய்தான்.
"நான் ஸ்ரீராம் கருணாகரன் பேசுறேன்"
"சொல்லுங்க எஸ்ஆர்கே... " என்றார் அவனை நன்கறிந்த அசிஸ்டன்ட் கமிஷனர்.
"நான் என்னோட ஃபார்ம் ஹவுஸ்க்கு என் வைஃப் கூட வந்திருந்தேன். எங்களை யாரோ அட்டக் பண்றாங்க"
"அட்டாக் பண்றாங்கன்னா...??? "
"என்னை ஷூட் பண்ண ட்ரை பண்ணாங்க"
"ஷூட் பண்ணாங்களா??? நான் உங்க வீட்டுக்கு போலீசை உடனே அனுப்புறேன். இதைப் பத்தி நீங்கள் கவலைப்பட வேண்டாம் நான் பார்த்துக்கிறேன்."
அழைப்பை துண்டித்த அசிஸ்டன்ட் கமிஷனர், ஸ்ரீராமின் பண்ணை வீட்டுக்கு அருகில் இருந்த காவல் நிலையத்திற்கு தொடர்புகொண்டு விஷயத்தைக் கூறி அவர்களை அனுப்பி வைத்தார்.
அதேநேரம், ஸ்ரீராமின் பண்ணை வீட்டின் காவலாளிகள், சுடப்பட்ட திசையை கணித்துக் கொண்டு, அந்த திசையை நோக்கி ஓடினர். ஒருவன் துப்பாக்கியுடன் காரில் ஏறி தப்பிச் செல்வதை பார்த்துவிட்டு திரும்பி வந்தனர் அவர்கள்.
YOU ARE READING
என்னை ஏதோ செய்து விட்டாள்...! ( முடிவுற்றது)✔️
Romanceஅவர்கள் பணத்தாலும் தகுதியாலும் நேர் எதிரான வித்தியாசம் கொண்டவர்கள். அவனுடைய கவனம் முழுவதும் பணத்தின் மீதும் கௌரவத்தின் மீதும் மட்டுமே... ஆனால் அவளோ, வாழ்க்கையின் சிறுசிறு சந்தோஷங்களிலும் நனைந்து திளைப்பவள்... அதீதமான கடவுள் நம்பிக்கை கொண்டவள்... மித...