80 இறுதி பகுதி
தங்கள் தேனிலவை முடித்து கொண்டு, மேலும் இரண்டு மூன்று டீல்களையும் கைப்பற்றிக்கொண்டு, ஒரு வாரத்திற்கு பிறகு இந்தியா திரும்பினார்கள் ஸ்ரீராமும், மிதிலாவும். அவர்கள் பூவனம் வந்த போது, அவர்களது குடும்பத்தினர் ஆஸ்திரேலியாவில் நடந்த ஃபேஷன் ஷோவை யூடியூபில் பார்த்துக் கொண்டிருந்தார்கள். அவர்களுடன் மிதிலாவும் இணைந்து கொண்டாள்.
"உங்க ட்ரிப் எப்படி இருந்தது?" என்றான் தினேஷ்.
"நம்ம கம்பெனிக்கு மொத்தம் அஞ்சு புது டீல் கிடைச்சிருக்கு" என்றாள் மிதிலா சந்தோஷமாக.
"வாவ்... செம" என்றான் பரத்.
"அப்படின்னா, வரப்போற நாள்ல நம்ம ரொம்ப பிஸியா இருக்க போறோம்னு சொல்லு..." என்றான் லட்சுமணன் சோகமாக.
ஆமாம் என்று கிண்டலாய் தலையசைத்தாள் மிதிலா.
"ராமு, நீயும் மிதிலாவும் அசத்திட்டீங்க" என்றாள் நர்மதா.
"இந்த டிரஸ்ல நீ கார்ஜியஸா இருக்க, மித்து" என்றாள் ஊர்மிளா.
"நிஜமா தான்... உங்களுடைய ஷோ செம்ம ஆஸம். நீங்க ரெண்டு பேரும் ஸ்டேஜ்ல *ராம்ப் வாக்* பண்ணும் போது, ஸ்டேஜ் அப்படியே சூடேறி போயிடுச்சு..." என்று சிலாகித்தான் லட்சுமணன்.
"எங்களுடைய பேர் எப்படி இருந்தது லட்சுமணன்?" என்றான் ஸ்ரீராம்.
"கலக்கல்" என்றான் லட்சுமணன்.
"ஓ அப்படியா...? நான் மிதிலாவை கல்யாணம் பண்ணிக்கப் போறேன்னு சொன்னப்போ நீ என்ன சொன்னேன்னு உனக்கு ஞாபகம் இருக்கா?" என்றான் தன் கைகளை தன் பாக்கெட்டில் விட்டுக்கொண்டு எகத்தாளமாய் ஸ்ரீராம்.
முகத்தை கோணலாகி கொண்டு தன் தலையை சொறிந்தான் லட்சுமண். மற்றவர்கள் சிரிக்க,
"நீங்க யாரும் சிரிக்க வேண்டாம்... நீங்க யாரும் கூட என்னை சப்போர்ட் பண்ணவே இல்ல... அதை மறந்துடாதீங்க" என்றான் ஸ்ரீராம்.
"ஏன் ராமு இவ்வளவு ஹீட்டா இருக்க?"
"இந்தப் பொண்ணு, என்னை ஹனிமூனை என்ஜாய் பண்ணவே விடல தெரியுமா?" என்றான் மிதிலாவை நோக்கி கை நீட்டி.
YOU ARE READING
என்னை ஏதோ செய்து விட்டாள்...! ( முடிவுற்றது)✔️
Romanceஅவர்கள் பணத்தாலும் தகுதியாலும் நேர் எதிரான வித்தியாசம் கொண்டவர்கள். அவனுடைய கவனம் முழுவதும் பணத்தின் மீதும் கௌரவத்தின் மீதும் மட்டுமே... ஆனால் அவளோ, வாழ்க்கையின் சிறுசிறு சந்தோஷங்களிலும் நனைந்து திளைப்பவள்... அதீதமான கடவுள் நம்பிக்கை கொண்டவள்... மித...