8 இரண்டாம் சவால்
ஸ்ரீராமின் அறைக் கதவை தட்டிவிட்டு உள்ளே நுழைந்தான் குகன்.
"எஸ், குகா?"
"நான் உன்கிட்ட ஒன்னு கேட்கலாமா, எஸ் ஆர் கே?"
"என்ன?"
"இந்த கம்பெனியோட மேனேஜரா இருக்கிற பட்சத்தில், இதோட ரூல்ஸ் அண்ட் ரெகுலேஷன்சை நான் தரோவா தெரிஞ்சு வச்சிருக்கணும்னு நினைக்கிறேன்"
அவன் என்ன சொல்ல வருகிறான் என்பதை புரிந்து கொண்டுவிட்ட ஸ்ரீராம், நீ என்ன தெரிந்து கொள்ள நினைக்கிறாய்? என்பது போல் அவனை பார்த்தான்.
"எஸ் ஆர் ஃபேஷன்ஷோட கிளாஸ்ல, நீ ஏதாவது புது ரூல் ஆட் பண்ணி இருக்கியா?"
ஒன்றும் கூறாமல் அவனைப் பார்த்துக் கொண்டிருந்தான் ஸ்ரீராம்.
"புரோபீஷியன்ஸி அப்புறம் மஸ்ட் ஒர்க் பீரியட்ஸ் பத்தி மிதிலா சொன்னாங்க. எனக்கு தெரிஞ்ச வரைக்கும், நம்ம கம்பெனியில அப்படி எந்த ரூலும் இல்லையே..."
"ஆமாம். நான் தான் புது ரூல் ஆட் பண்ணி இருக்கேன். நம்ம நேரத்தையும் பணத்தையும் செலவு பண்ணி, புதுசா ஒரு போஸ்டுக்கு இன்டர்வியூ நடத்தி, புதுசா வர்றவங்களுக்கு வேலையும் சொல்லிக் கொடுக்குறோம். அவங்க வேலையை ரிசைன் பண்ணும் போது, நம்மோட எஃபர்ட்ஸ் வேஸ்டா போகுது. அதே நேரம், நம்மளுடைய டெக்னிக்ஸை கத்துகிற ஒர்க்கர்ஸ்ஸை, நம்மளுடைய போட்டி கம்பெனிங்க வேணுமின்னே அதிக சம்பளம் கொடுத்து அவங்க கம்பெனிக்கு இழுத்துக்குறாங்க. இதையெல்லாம் அவாய்ட் பண்ண தான் அந்த ருலை நான் ஆட் பண்ணேன்"
"ஓஹோ... ஆனா, அதைப் பத்தி நீ எங்ககிட்ட சொல்லவே இல்லையே?"
தனது பேண்ட் பாக்கெட்டிலிருந்து கைப்பேசியை எடுத்து, ஸ்ரீராமுக்கு தெரியாமல், மேஜையின் கீழ் வைத்து, மிதிலாவுக்கு ஒரு மிஸ்டு கால் கொடுத்தான் குகன். அந்த அழைப்பை துண்டித்து விட்டு, ஸ்ரீராமின் அறையை நோக்கி நடந்தாள் மிதிலா. அவன் அழைத்த பின், ஸ்ரீராமின் அறைக்கு வரும்படி அவளிடம் கூறியிருந்தான் அல்லவா குகன்?
YOU ARE READING
என்னை ஏதோ செய்து விட்டாள்...! ( முடிவுற்றது)✔️
Romanceஅவர்கள் பணத்தாலும் தகுதியாலும் நேர் எதிரான வித்தியாசம் கொண்டவர்கள். அவனுடைய கவனம் முழுவதும் பணத்தின் மீதும் கௌரவத்தின் மீதும் மட்டுமே... ஆனால் அவளோ, வாழ்க்கையின் சிறுசிறு சந்தோஷங்களிலும் நனைந்து திளைப்பவள்... அதீதமான கடவுள் நம்பிக்கை கொண்டவள்... மித...