49 கறை நல்லது...?
தனது அடிபட்ட காலை கீழே தொங்க விட்டபடி, லயா கட்டிலில் அமர்ந்திருந்ததை பார்த்தார் புஷ்பா. அவளை நோக்கி ஓடிச் சென்று அவளது காலை எடுத்து கட்டிலின் மீது வைத்தார் அவர். அதைப் பார்த்து திடுக்கிட்டாள் லயா.
"அடிபட்ட காலை இப்படி தொங்க விட்டு உட்காரக் கூடாது. வீங்கிடும்"
"சரிங்க ஆன்ட்டி" என்று பல்லைக் காட்டினாள் லயா.
"உங்க அம்மா, உன்னை நல்லா பாத்துக்க சொல்லியிருக்காங்க. அவங்களுக்கு கொடுத்த வார்த்தையை நாங்க காப்பாத்தணும். அதனால, கட்டிலை விட்டு நீ கீழே இறங்க கூடாது. சரியா?"
சில வேலையாட்கள் ஒரு கட்டிலை தூக்கி வருவதை பார்த்தாள் லயா. அந்தக் கட்டிலை கீழே வைத்துவிட்டு, லயா அமர்ந்திருந்த கட்டிலை, அவளை கட்டிலில் வைத்தபடியே அவர்கள் தூக்க,
"ஐயையோ..." என்று அலறினாள் லயா
"பயப்படாதே, ஒன்னுமில்ல..." என்றார் புஷ்பா.
அவர்கள், இரண்டு கட்டியையும் ஒரே இடைவெளிவிட்டு வைத்து விட்டு சென்றார்கள். அங்கு என்ன நடக்கிறது என்று புரியவில்லை லயாவுக்கு.
"இந்த கட்டில் எதுக்கு, ஆன்ட்டி?" என்றாள் புஷ்பாவிடம்.
"எனக்கு தான்"
"உங்களுக்கா?" என்றாள் அதிர்ச்சியுடன்.
"ஆமாம்"
"நீங்களும் இந்த ரூம்லயா இருக்கப் போறீங்க?" என்றாள் அதிர்ச்சியாய்.
"ஆமாம்"
"ஆனா, நான் தனியா இருந்து பழக்கப்பட்டவ. எனக்கு பிரைவசி வேணும்" என்று கெஞ்சினாள்.
"வாய்ப்பே இல்ல. உன்னை எப்படி நாங்க தனியா விட முடியும்? உனக்கு ஏதாவது வேணும்னா என்ன செய்றது?"
"நான் உங்களை கூப்பிடுறேன்"
"தேவையே இல்ல. எங்களுக்கு, உங்க அம்மாவுடைய சந்தோஷம் தான் முக்கியம். இப்ப நீ படு" என்று உத்தரவிட்டார் புஷ்பா.
அவரை மனதிற்குள் திட்டியபடி படுத்துக்கொண்டாள் லயா.
இரண்டு தலையணைகளை லயாவின் காலுக்கு அடியில் வைத்த அவர், அடுத்து செய்தது தான் தரமான சம்பவம். லயாவின் பக்கத்தில் அமர்ந்து, ஒரு செல்ஃபி எடுத்து,
YOU ARE READING
என்னை ஏதோ செய்து விட்டாள்...! ( முடிவுற்றது)✔️
Romanceஅவர்கள் பணத்தாலும் தகுதியாலும் நேர் எதிரான வித்தியாசம் கொண்டவர்கள். அவனுடைய கவனம் முழுவதும் பணத்தின் மீதும் கௌரவத்தின் மீதும் மட்டுமே... ஆனால் அவளோ, வாழ்க்கையின் சிறுசிறு சந்தோஷங்களிலும் நனைந்து திளைப்பவள்... அதீதமான கடவுள் நம்பிக்கை கொண்டவள்... மித...