43 வளைகாப்பு ( நீண்ட அத்தியாயம்)
பூவனம்
மிதிலாவை சந்தித்துவிட்டு வந்த ஸ்ரீராம், அடுத்து என்ன செய்வது என்பதை தீர்மானித்து விட்டே வந்தான். திருமண தேதியை முடிவு செய்வது தான் அது. நேராக நர்மதாவின் அறைக்கு சென்றவன், அவள் அவளது, மற்றும் தினேஷின் உடைகளை எடுத்து வைத்துக் கொண்டிருப்பதை பார்த்து நின்றான்.
"நீங்க எங்கேயாவது போறிங்களா, கா?"
"நல்ல காலம், நீ வந்துட்ட, ராமு. தினேஷோட அத்தைக்கு ஆக்சிடென்ட் ஆயிடுச்சு. அவங்களைப் பார்க்க நாங்க மதுரைக்குக் கிளம்பிக்கிட்டு இருக்கோம். ரெண்டு நாள்ல திரும்பி வந்துடுவோம்"
அதைக்கேட்டு ஏமாற்றம் அடைந்தான் ஸ்ரீராம். மிதிலாவின் இல்லத்திற்கு, நர்மதாவை பூமுடிக்க அனுப்பலாம் என்று எண்ணியிருந்தான் அவன். நடப்பதை பார்த்தால், அது அவ்வளவு சீக்கிரம் நடக்காது போல் தெரிகிறது. அவனுடைய முகம் வாடி போனதைப் பார்த்து சிரித்தான் தினேஷ்.
"கவலைப்படாதீங்க ராமு. இதனால உங்க கல்யாணம் எந்த விதத்திலும் பாதிக்காது."
"ஆனா, நீங்க கவலையா இருக்கும் போது, அக்காவால எப்படி கல்யாண வேலையை பாக்க முடியும்?" என்றான் ஸ்ரீராம்.
"நான் கவலையா இருக்கேன்னு யார் சொன்னது? நான் ரொம்ப சந்தோஷமா இருக்கேன்" என்று சிரித்தான்.
அவன் தோளில் பட்டென்று ஒரு அடி போட்டாள் நர்மதா. அதைப் பார்த்து முகத்தை சுருக்கினான் ஸ்ரீராம், தனது அத்தைக்கு விபத்து நடந்திருக்கும் நேரத்தில் அவன் கிண்டல் செய்வதை பார்த்து.
"அது ஒன்னும் இல்ல ராமு, அவர் சின்ன வயசுல இருந்தப்போ, அவங்க அம்மாவை, அவங்க அத்தை ரொம்ப டார்ச்சர் பண்ணாங்களாம். அதனால அவருக்கு அவங்க அத்தையை பிடிக்காது" என்றாள் நர்மதா.
தன் கண்களை சுழற்றினான் ஸ்ரீராம்.
"ஆமாம் ராமு. என்னோட அத்தை தான் என்னோட வாழ்க்கையிலேயே பெரிய வில்லி. எங்க அம்மாவை பாடா படுத்தி வச்சாங்க"
YOU ARE READING
என்னை ஏதோ செய்து விட்டாள்...! ( முடிவுற்றது)✔️
Romanceஅவர்கள் பணத்தாலும் தகுதியாலும் நேர் எதிரான வித்தியாசம் கொண்டவர்கள். அவனுடைய கவனம் முழுவதும் பணத்தின் மீதும் கௌரவத்தின் மீதும் மட்டுமே... ஆனால் அவளோ, வாழ்க்கையின் சிறுசிறு சந்தோஷங்களிலும் நனைந்து திளைப்பவள்... அதீதமான கடவுள் நம்பிக்கை கொண்டவள்... மித...