28 எதிர்பாராதது
ஸ்ரீராம் கோபத்துடன் விட்டெறிந்த துண்டுச்சீட்டு, அவன் அறைக்குள் நுழைந்த குகனின் காலடியில் சென்று விழுந்தது. அதை எடுத்துப் படித்தான் குகன். ஸ்ரீராமின் மேஜை மீது வைக்கப்பட்டிருந்த பரிசை பார்த்து பதட்டம் அடைந்தான் அவன். ஸ்ரீராமின் முகம் அவனது உள்ளக் கிளர்ச்சியை வெளிப்படுத்தியது. அது குகனை எச்சரிக்கை அடைய செய்தது.
"நீ கொடுத்த கிஃப்ட்டை, எப்படி அவங்க வாங்கிகிட்டாங்கன்னு நான் ஆச்சரியப்பட்டேன். இந்த மாதிரி அவங்க ஏதாவது செய்வாங்கன்னு எதிர்பார்த்தேன். ஏன்னா, நீ கொடுத்த கிஃப்ட்டை வாங்கிக்கிட்டா அவங்க மிதிலாவே இல்ல."
*நீ என்ன பைத்தியமா?* என்பதைப் போல் அவனை பார்த்தான் ஸ்ரீராம்.
"மிதிலா அப்படித் தான். தன்னுடைய கடமையைச் செஞ்சதுக்காக நீ கொடுக்கிற கிஃப்ட்டை வாங்கிக்குற ஆள் இல்ல அவங்க. இந்த மாதிரியான அட்ராக்ஷனுக்கு எல்லாம் அவங்க மயங்கமாட்டாங்க. அவங்க ஒரு தனிரகம். உன்னோட கிஃப்டை ஏத்துக்கணும்னா, நீ அவங்க ஃப்ரண்டாவோ, இல்ல அவங்க மனசுக்கு பிடிச்சவனாவோ இருக்கணும்... அப்போ, அதை அவங்க மனப்பூர்வமா ஏத்துக்குவாங்க"
குகனை ஏறிட்டுப் பார்த்த ஸ்ரீராமின் முகம் மாறியது. அவன் என்ன சொல்ல வருகிறான் என்று புரிந்து போனது ஸ்ரீராமுக்கு.
"ஆனா, நீ அவங்களுக்கு ஃப்ரெண்டாக வாய்ப்பில்ல. ஏன்னா, காரணமே இல்லாம, முகத்துக்கு நேரா அவங்களை நீ அவமானப்படுத்தியிருக்க. அவங்க சுயமரியாதை உள்ள பொண்ணு. லோகிளாஸ் ஆளுங்களை பத்தி நீ என்ன நினைக்கிறன்னு தெரிஞ்சதுக்கு பிறகும், நீ கொடுக்கிற கிஃப்ட்டை அவங்க வாங்கிக்குவாங்கன்னு நினைச்சியா? அப்படி அவங்க வாங்கிக்கிட்டா, லோக்ளாஸ் ஆளுங்களை பத்தி, நீ சொன்னது சரின்னு நிரூபிக்கிற மாதிரி ஆயிடாதா?"
மென்று முழுங்கினான் ஸ்ரீராம்.
"நீ எதுக்காக அன்னைக்கு அப்படி பேசினேன்னு எனக்கு புரியல. உன்னை பொருத்தவரைக்கும் வேணும்னா அது சாதாரணமான வார்த்தையாயிருக்கலாம். ஆனா, எதிரில் நின்னு அவமானப்பட்ட அவங்களுக்கு தான் தெரியும் அதோட ஆழம்..."
YOU ARE READING
என்னை ஏதோ செய்து விட்டாள்...! ( முடிவுற்றது)✔️
Romanceஅவர்கள் பணத்தாலும் தகுதியாலும் நேர் எதிரான வித்தியாசம் கொண்டவர்கள். அவனுடைய கவனம் முழுவதும் பணத்தின் மீதும் கௌரவத்தின் மீதும் மட்டுமே... ஆனால் அவளோ, வாழ்க்கையின் சிறுசிறு சந்தோஷங்களிலும் நனைந்து திளைப்பவள்... அதீதமான கடவுள் நம்பிக்கை கொண்டவள்... மித...