3 எதிர்பாராதது

2.5K 105 8
                                    

3 எதிர்பாராதது

ஸ்ரீராமிடம் பேசவேயில்லை நர்மதா. அது ஸ்ரீராமுக்கு எரிச்சலூட்டியது. ஏனென்றால், அதற்கு காரணம் மிதிலா. அவளால் தான், அவனுடைய அக்கா, அவன் மீது கோபமாக இருக்கிறார். நர்மதாவை சமாதானப் படுத்தும் நோக்கோடு அவளது அறைக்குச் சென்றான் ஸ்ரீராம்.

"அக்கா, சின்ன பிள்ளை மாதிரி நடந்துக்குறதை நிறுத்துங்க" என்றான்.

"நான் எப்படி நடந்துக்கணும்னு நீ எனக்கு சொல்லாத, ஸ்ரீராம். ஏன்னா, யார்கிட்ட எப்படி நடந்துக்கணும்னு உனக்கே தெரியலயே..." என்று சீறினாள்.

அவள் தன்னை *ஸ்ரீராம்* என்று அழைத்ததை பார்த்து அவன் திடுக்கிட்டான். அவள் கோபமாக இருக்கும் போது தான் அப்படி அழைப்பது வழக்கம். இல்லாவிட்டால் ராமு என்று தான் அழைப்பாள்.

"வேற யாரோ ஒருத்தருக்காக நீங்க என்கிட்ட சண்டை போடுறது எனக்கு சுத்தமா பிடிக்கல" என்றான்.

"என்னுடைய கெஸ்ட்டை நீ இன்சல்ட் பண்ணது, எனக்கு கூட தான் பிடிக்கல... நீ எப்படி அப்படி செய்யலாம்? இந்த வீட்டுல எனக்கு எந்த மரியாதையும் இல்லையா?"

"அக்கா, என்னுடைய எண்ணம் அது இல்ல. அது உங்களுக்கும் நல்லா தெரியும்"

"எனக்கு தெரியும்... ஆனா, மிதிலாவுக்கு தெரியுமா? உன்னை பத்தி அவங்க என்ன நெனச்சிருப்பாங்க?"

"அவ என்னை பத்தி என்ன நினைக்கிறான்னு எனக்கு கவலை இல்ல..."

"அதுக்காக நீ அவங்களை அவமானப் படுத்தலாம்னு அர்த்தமில்ல. உன்னுடைய நடத்தை தான், உன் குடும்பத்தை பத்தி சொல்லும்"

வெறுப்புடன் தன் கண்களை சுழற்றினான் ஸ்ரீராம்.

"அவங்ககிட்ட அப்படி என்ன நீ தப்பா பாத்துட்டேன்னு அந்த மாதிரி நடந்துகிட்ட?" என்ற அவளது குரலில் வருத்தம் தெரிந்தது.

"நீங்க அவகிட்ட அப்படி என்ன பார்த்தீங்கன்னு ஆளாளுக்கு அவ கூட சேர்ந்து ஆடிக்கிட்டு இருக்கீங்க?" அவர்கள் மிதிலாவிடம் காட்டிய ஈடுபாட்டை பொறுத்துக் கொள்ள முடியாமல் கேட்டே விட்டான் ஸ்ரீராம்.

என்னை ஏதோ செய்து விட்டாள்...! ( முடிவுற்றது)✔️Where stories live. Discover now