4 தான் என்ற அகங்காரம்

2.5K 104 11
                                    

4 தான் என்ற அகங்காரம்

சிலை போல் நின்றிருந்த குகனைப் பார்த்து தன் கண்களை சுருக்கினான் ஸ்ரீராம்.

"என்ன்ன்ன?"

"எஸ்ஆர்கே, மிதிலா, பரத்துக்கு பிஏவா செலெக்ட் ஆகியிருக்காங்க..." என்றான் தயக்கத்துடன்.

"அதனால என்ன? எனக்கு ஒரு பிஏ வேணுமுன்னு உங்களுக்கெல்லாம் தோணலையா?" என்றான் சீரியஸாக, ஏதோ அவர்கள் தான் அவனுக்கு ஒரு உதவியாளர் அவசியமில்லை என்று இருந்தது போல.

மலங்க மலங்க விழித்தான் குகன்.

"நீ தானே உனக்கு பிஏவே வேண்டாம்னு இருந்த...?" என்று கேட்டே விட்டான் குகன்.

"இப்போ எனக்கு வேணும்னு தோணுது. நீ தான சொன்ன, இப்ப செலக்ட் ஆகி இருக்கிறவங்க ரொம்ப எலிஜிபிள் கேண்டிடேட், எல்லா கொஸ்டினுக்கும் ஆன்சர் பண்ணாங்கன்னு...? என்னுடைய எதிர்பார்ப்பை அவங்க ஃபுல்ஃபில் பண்ணலாம் இல்லையா...? ட்ரை பண்ணி பாக்குறேனே..." என்றான் சர்வ சாதாரணமாக.

முயற்சி செய்து பார்ப்பதா? இவன் என்ன தான் நினைத்துக் கொண்டிருக்கிறான்?

"ஆனா, எஸ்ஆர்கே..." என்று இழுத்தான் குகன்.

"என்ன பிரச்சினை உனக்கு? எனக்கு ஒரு பிஏ வேணும்னு நினைக்கிறதுல என்ன தப்பு இருக்கு?" என்று சீறினான்.

"இல்ல... நம்ம இன்டர்வியூ நடத்தினது பரத்தோட பிஏவுக்கு தான்... மிதிலாகிட்டயும் அப்படித் தான் சொல்லியிருக்கு..."

"நம்ம கம்பெனி ஸ்டாஃப்ன்னா, நம்ம சொல்ற வேலையை செய்யணும். நம்ம யாருக்கு சொல்றோமோ அவங்களுக்காக வேலை செய்யணும். புரிஞ்சுதா?"

"புரிஞ்சது"

அதற்கு மேல் அவனுடன் விவாதிக்க முடியும் என்று தோன்றவில்லை குகனுக்கு.

"இன்டர்வியூல செகண்ட்டா வந்த கேண்டிடேட்டை பரத்துக்கு பிஏவா அப்பாயின்ட் பண்ணு."

"நீ சொல்ற மாதிரியே செஞ்சுடுறேன்"

மிதிலாவின் பணி நியமன ஆணையை எடுத்துக்கொண்டு அங்கிருந்து மெல்ல நகர்ந்து சென்றான் குகன். ஸ்ரீராமின் மனதில் என்ன இருக்கிறது என்று அவனுக்கு புரியவில்லை.

என்னை ஏதோ செய்து விட்டாள்...! ( முடிவுற்றது)✔️Where stories live. Discover now