6 மிதிலாவின் வருகை

2.3K 98 8
                                    

6 மிதிலாவின் வருகை

வழக்கத்திற்கு மாறாக, அன்று அதித ஆர்வத்துடன் இருந்தான் ஸ்ரீராம். மிதிலா வேலையில் சேரப் போகிறாளா, இல்லையா என்பதை தெரிந்துகொள்ள அவனுக்கு ஆவலாக இருந்தது. அவளைப் பற்றி அவனுக்கு ஒன்றும் தெரியாது என்பதால், அவளுடைய முடிவு என்னவாக இருக்கும் என்று அவனால் கணிக்க முடியவில்லை. அவள் லட்சுமணனை காதலிக்கவில்லை என்பதால், இந்த வேலையை வேண்டாம் என்று கூற அதிக வாய்ப்பு இருக்கிறது. அவன் யார் என்று தெரியாமல் தான், அவனிடம் அவள் வாக்குவாதம் செய்திருக்க வேண்டும். ஆனால் இப்பொழுது, ஸ்ரீராம் யார் என்று தெரிந்த பின், அவளுக்கு இந்த வேலையில் சேரும் தைரியம் இருக்காது. அதுவும், அவனுடைய நேரடி உதவியாளராக சேர நிச்சயம் தைரியம் இருக்காது.

வழக்கமாய் வரும் நேரத்திற்கு சற்று முன்னதாகவே அலுவலகம் வந்து சேர்ந்தான் ஸ்ரீராம். சர்வ சகஜமாக தனது அறைக்கு சென்றான். ஒரு புது மனிதன் அவனுக்கு வணக்கம் தெரிவித்தான். லேசாய் தன் தலையசைத்துவிட்டு நடந்தான். அந்த புது மனிதன் யார் என்று அவனுக்கு தெரியவில்லை. சிறிது நேரத்தில், அவனது அறையின் கதவை யாரோ தட்டும் சத்தம் கேட்டது.  அவனுக்கு வணக்கம் தெரிவித்த அதே மனிதன் உள்ளே நுழைந்தான்.

"குட் மார்னிங் சார்" என்றான் அவன்.

"யார் நீ?" என்றான் ஸ்ரீராம்.

"என் பேர் ஜீவா. பரத் சாரோட பிஏ வா நான் செலக்ட் ஆகி இருக்கேன், சார். இது என்னுடைய ஜாயினிங் ஆர்டர்"

ஸ்ரீராமுக்கு முன்னாள், மேஜையின் மீது அதை வைத்தான். ஒன்றும் கூறாமல் அதில் தனது கையொப்பத்தை பதிவிட்டான் ஸ்ரீராம்.

"தேங்க்யூ சார்" பணி சேர்க்கை ஆணையை கையில் எடுத்துக்கொண்டு அங்கிருந்து சென்றான் ஜீவா.

இப்பொழுது பொறுமை இழந்தான் ஸ்ரீராம். நேர்முகத் தேர்வில் இரண்டாம் இடம் பிடித்தவன், பரத்துக்கு உதவியாளனாக சேர்ந்துவிட்டான் என்றால், மிதிலா என்ன ஆனாள்? 

என்னை ஏதோ செய்து விட்டாள்...! ( முடிவுற்றது)✔️Where stories live. Discover now