7 முதல் பணி

2.1K 100 11
                                    

7 முதல் பணி

பூவனம்

பூஜையை முடித்துக் கொண்டு வந்த நர்மதா, பாட்டிக்கும் புஷ்பாவிற்கும் பிரசாதம் கொடுத்தாள். அவள் பதட்டமாக இருந்தாள்.

"என்ன நர்மதா, வழக்கத்துக்கு மாறா பிரசாதம் எல்லாம் செஞ்சு கடவுளுக்கு ஐஸ் வைக்கிற... உங்க அப்பா, அம்மாவை வேற கும்பிட்டுட்டு வர... என்ன விஷயம்?" என்றார் சித்தி புஷ்பா.

"நீங்க சொல்றது உண்மை தான். நம்ம ராமுவுக்கு நல்ல புத்தி கொடுக்க சொல்லி அம்மாகிட்ட வேண்டிகிட்டேன்."

"அவனோட புத்திக்கு என்ன குறை?"

"அவன் மிதிலாவை வேணுமுன்னே  தனக்கு பிஏ வா அப்பாயின்ட் பண்ணியிருக்கான். அவங்க இன்னைக்கு வேலையில ஜாயின் பண்றாங்க"

"இது ரொம்ப நல்ல விஷயமாச்சே...? இதுக்கு ஏன் நீ பதட்டமாய் இருக்க?"

"மிதிலா, கடைசியா இங்க வந்தப்போ, அவங்ககிட்ட ராமு சண்டை போட்டான். அவனுக்கு அவங்களை சுத்தமா பிடிக்காது..."

"இது என்ன புது கதை...? வழக்கமா, தனக்கு பிடிக்காதவங்களை ராமு தூரமா தானே வைப்பான்?" என்றார் சித்தி புஷ்பா.

காபி குடிப்பதை நிறுத்திவிட்டு அவரை பார்த்தார் பாட்டி. புஷ்பா சொல்வது சரி தான். பாட்டியும் ராமுவை நன்கு அறிவார். தனக்கு பிடிக்காதவர்களை பார்க்க கூட விரும்பமாட்டான் ஸ்ரீராம்.

"எனக்கு ரொம்ப பயமாயிருக்கு, சித்தி. அதனால தான் அம்மா, அப்பாகிட்ட வேண்டிகிட்டேன், அவனுக்கு நல்ல புத்தியைக் கொடுக்க சொல்லி"

"ராமு ஒன்னும் சாடிஸ்ட் இல்ல... வேணுமின்னே யாரையும் அவன் கஷ்டப்படுத்த மாட்டான்" என்றார் புஷ்பா.

"அவன் சீக்கிரமே மிதிலாவை புரிஞ்சிக்கணும்" என்றாள் நர்மதா.

"அவ உண்மையிலேயே ரொம்ப நல்ல பொண்ணு. அதை அவன் சீக்கிரம் புரிஞ்சுக்குவான்"

அப்பொழுது அங்கு வந்த பிரியா, அவர்களுடன் அமர்ந்து கொண்டாள். அவள் என்ன கூறப் போகிறாள் என்று புரிந்து போனது புஷ்பாவிற்கு. ஐயோ என்று இருந்தது அவருக்கு.

என்னை ஏதோ செய்து விட்டாள்...! ( முடிவுற்றது)✔️Where stories live. Discover now