10 ஆத்ம உணர்வு
குற்ற உணர்ச்சியில் தவித்தான் ஸ்ரீராம். மிதிலாவிடம் அவன் அப்படி பேசியிருக்க கூடாது. அவள் கூறும் ஒவ்வொன்றுக்கும் ஏதாவது பதில் கூற வேண்டும் என்று அவனுக்கு ஏன் தோன்றுகிறது? எல்லா விவாதத்திலும் அவளை ஜெயிக்க வேண்டும் என்று ஏன் அவன் நினைக்கிறான்? அவன் ஒப்புக்கொண்டு தான் தீரவேண்டும்... அவளிடம் ஏதோ இருக்கிறது. தனக்கு வழங்கும் வேலைகளை செய்யாமல், சாக்குபோக்கு சொல்லும் பலரை அவன் பார்த்திருக்கிறான். ஆனால் இந்தப் பெண்ணோ, அவள் செய்ய வேண்டிய அவசியமே இல்லாத வேலையை செய்து முடித்திருக்கிறாள்.
எல்லாம் சரி தான். ஆனால், அவன் எப்படி மன்னிப்புக் கேட்பது? கேட்க கூடாது என்று அல்ல... அவனால் மன்னிப்பு கேட்க முடியாது. கேட்க முடியாது என்பதால், கேட்க விரும்பவில்லை என்று அர்த்தம் அல்ல. அவன் அப்படித் தான். இது தான் ஸ்ரீராம். இது வரை அவன் யாரிடமும் மன்னிப்பு கேட்டதில்லை... ஏனென்றால், இதுவரை அவன் தவறே செய்ததில்லை. தனது உணர்வுகளை வெளிப்படுத்துவதில் அவன் திறமையற்றவன். வார்த்தை விளையாட்டு எல்லாம் அவனுக்கு வராது. அதிரடியாய் காரியத்தில் இறங்கி செய்து முடிப்பான். செயல்களால் பேசக்கூடியவன். அவன் செய்யும் செயல்கள் ஆயிரம் வார்த்தைகள் பேசும். அது பழிக்குப்பழியாக இருந்தாலும் சரி... மன்னிப்பு கோருவதாக இருந்தாலும் சரி... தான் வழக்கமாய் நடந்து கொள்வதற்கு, நேர்மாறாக நடந்து கொண்டால், அதுவும் ஒருவகையில் மன்னிப்பு தானே? மாற்றிக்கொண்டுவிட்ட நடத்தையை விட சிறந்த மன்னிப்பு என்னவாக இருந்துவிட முடியும்?
தன் மனதிற்குள் மிக நீண்ட பட்டிமன்றம் நடத்திய பிறகு, வார்த்தைகளால் நன்றி கூற தேவையில்லை என்று தன்னைத்தானே சமாதானப்படுத்திக் கொண்டான் ஸ்ரீராம்.
அப்பொழுது அவன் கைபேசிக்கு ஒரு அழைப்பு வந்தது.
"சொல்லுங்க"
"...."
"அனுப்பிட்டீங்களா?"
"....."
YOU ARE READING
என்னை ஏதோ செய்து விட்டாள்...! ( முடிவுற்றது)✔️
Romanceஅவர்கள் பணத்தாலும் தகுதியாலும் நேர் எதிரான வித்தியாசம் கொண்டவர்கள். அவனுடைய கவனம் முழுவதும் பணத்தின் மீதும் கௌரவத்தின் மீதும் மட்டுமே... ஆனால் அவளோ, வாழ்க்கையின் சிறுசிறு சந்தோஷங்களிலும் நனைந்து திளைப்பவள்... அதீதமான கடவுள் நம்பிக்கை கொண்டவள்... மித...