11 மிதிலாவின் மறுப்பு

2.2K 103 9
                                    

11 மிதிலாவின் மறுப்பு

தனது கையிலிருந்த காகிதத்தை, தாங்க முடியாத கோபத்துடன் சுக்குநூறாய் கிழித்து எறிந்தாள் மாலினி. அவளைப் பொறுத்தவரை அது காகிதம் அல்ல... மிதிலா. இன்று காலை வரை, யார் வேண்டுமானாலும் ஸ்ரீராமின் அறைக்குள் ஸ்ரீராமின் அனுமதியே கூட இல்லாமல் நுழைந்து விட முடிந்தது. இன்று திடீரென்று அவனுக்கு என்ன ஆனது? எதற்காக அவனுடைய அறைக்குள் நுழைய அனைவரும் அவளுடைய அனுமதியை பெற வேண்டும்? இது அவளுக்கு ஸ்ரீராமிடம் இருந்து கிடைத்த மிகப்பெரிய கவுரவம். இது என்ன புது சட்டம்? மாலினிக்கு ஸ்ரீராமை பற்றி நன்றாகவே தெரியும். அவனுடைய கடைக்கண் பார்வைக்காக தவமாய் தவம் கிடந்தவள் ஆயிற்றே அவள்... இன்று வரை அதை அவளால் சாதிக்க முடியவில்லையே... ஒரு பெண்ணை தன் அருகில் இருத்திக் கொள்வது என்பது ஸ்ரீராம் ஸ்டைல் அல்ல. ஒருவேளை, ஸ்ரீராம் விழுந்து விட்டானோ? அதை மாலினியால் நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை. இதற்கு அவள் ஏதாவது செய்தாக வேண்டும்... வெகு சீக்கிரம்... ஸ்ரீராம் முழுவதுமாய் அவள் கையில் இருந்து நழுவி செல்லும் முன்...!

ஸ்ரீராமின் அறை

ஸ்ரீராம் கூறியவற்றை எழுதிக்கொண்டு, எழுந்து நின்றாள் மிதிலா. அப்பொழுது, ஸ்ரீராமின் அறை கதவை யாரோ தட்டும் சத்தம் கேட்டது. தன் உத்தரவை அவள் எந்த அளவிற்கு பின்பற்றுகிறாள் என்று பார்க்க நினைத்தான் ஸ்ரீராம். கதவருகே சென்று, சிறிதளவு மட்டுமே திறந்து, வந்திருப்பது யார் என்று கவனித்தாள் மிதிலா. அங்கு பரத் நின்றுகொண்டிருந்தான். ஸ்ரீராமை நோக்கி தன் பார்வையை திருப்பினாள் மிதிலா.

"பரத் சார் வந்திருக்காரு. காரணம் இல்லாம ஏஎம்டி உங்களை பார்க்க வரமாட்டார்ன்னு நினைக்கிறேன், சார்" என்றாள் கதவை முழுதாய் திறக்காமல்.

அவள் என்ன கூறுகிறாள் என்று  புரியாமல் முகம் சுளித்தான் பரத். ஆம் என்று தலையசைத்தான் ஸ்ரீராம்.

"யூ கேன் கம் இன், சார்" என்று, பரத் உள்ளே நுழைய இடம் கொடுத்து, அங்கிருந்து சென்றாள் மிதிலா.

என்னை ஏதோ செய்து விட்டாள்...! ( முடிவுற்றது)✔️Where stories live. Discover now