15 குறி...

2K 99 10
                                    

15 குறி...

இதற்கிடையில்...

மிதிலாவிற்கு உணவை ஊட்டிவிட்டுகொண்டிருந்தார் அவளுடைய அம்மா சந்தா.  பலவீனம் அடைந்திருந்த மிதிலா மெல்ல சாப்பிட்டாள். அவளுக்கு சட்டென்று புரை ஏற, தண்ணீரைக் கொடுத்து அவள் முதுகை வருடி விட்டார் சந்தா. தண்ணீர் குடித்தபடி தன் நெஞ்சை தொட்டாள் மிதிலா. அப்பொழுது அவள் அணிந்திருந்த உடையில் ஏதோ பிசுபிசுப்பாய் இருந்தது. அது என்ன என்று அறிய அவள் முற்பட்டாள். அதை பார்த்த சாந்தா அது என்ன என்பதை அறிந்து கொண்டு,

"அது தேன்" என்றார்.

"நீங்க எனக்கு ஊட்டிவிட்டீங்களா?"  என்றாள் மிதிலா.

"நீ மயக்கமானப்போ உங்க ஆஃபீஸ்ல யாராவது கொடுத்திருபாங்கன்னு நினைக்கிறேன்"

அதைக் கேட்டு ஒரு நொடி ஸ்தம்பித்தாள் மிதிலா. அவள் மயக்கமான பொழுது, அவளுடன் இருந்த ஒரே ஒரு நபர் அவளுடைய பாஸ் ஸ்ரீராம் மட்டும் தானே? அவனா அவளுக்கு தேனை புகட்டினான்? இருக்கலாம். அவனும் ஒரு சர்க்கரை நோயாளி ஆயிற்றே...!

"படுத்து தூங்கி, நல்லா ரெஸ்ட் எடு" என்றார் சாந்தா.

சரி என்று தலையசைத்து, படுத்துக்கொண்டாள் மிதிலா, தான் கடந்து வந்த அந்த மோசமான நாளை நினைத்தபடி.

மறுநாள் காலை

தனது கைபேசி மணியின் ஒலியை கேட்டு கண்விழித்து, கட்டிலின் மீது எழுந்து அமர்ந்தான் ஸ்ரீராம். அந்த அழைப்பு சுவாமிநாதனிடம் இருந்து வந்தது.

"சொல்லுங்க சுவாமிநாதன்"

"எஸ்ஆர்கே, அந்த பில்டிங் இடிஞ்சு விழுந்துடுச்சி" என்று அவர் கூறியதை கேட்டு திடுக்கிட்டான் ஸ்ரீராம்.

"எப்போ நடந்தது?"

"நேத்து ராத்திரி ஏழரை மணி வாக்குல... அக்கம் பக்கத்துல இருந்தவங்க பாத்திருக்காங்க"

"ஓ..."

"அங்க இருந்த எல்லாரையும் நான் வெளியேத்திட்டேன். அதனால நீங்க பயப்பட வேண்டாம்"

என்னை ஏதோ செய்து விட்டாள்...! ( முடிவுற்றது)✔️Where stories live. Discover now