16 மிதிலாவின் அணுகுமுறை
மிதிலா எப்படி இன்னும் உயிருடன் இருக்கிறாள் என்று எண்ணியபடி பதற்றத்துடன் அவள் அருகில் வந்தாள் மாலினி. ஆனால், அவள் ஏன் பதற்றமாக இருக்கிறாள் என்று மிதிலாவினால் புரிந்து கொள்ள முடியவில்லை. மிதிலாவை போன்ற ஒரு நல்ல பெண்ணுக்கு, வஞ்சக உள்ளம் கொண்ட மாலினியின் மனதில் இருப்பதை புரிந்துகொள்வது சிரமம் தானே...? ஒருவேளை, அவளுடைய அம்மாவிற்கு ஏதாவது பிரச்சனையோ என்று எண்ணினாள் மிதிலா.
"உங்க அம்மா எப்படி இருக்காங்க?" என்றாள் அக்கறையுடன்.
"அவங்க அம்மாவுக்கு உடம்பு சரி இல்லைன்னு உங்களுக்கு எப்படி தெரியும்?" என்றான் குகன் குழப்பத்துடன்.
"நேத்து காலையில, அவங்களை இங்க பார்த்தப்போ சொன்னாங்க. அவங்க தான் எனக்கு அந்த பில்டிங் அட்ரஸ்ஸையும் கொடுத்தாங்க" அந்த வார்த்தைகளை உதிர்த்தவாறு காப்பியை பருகினாள் மிதிலா.
"என்னது உங்களுக்கு அட்ரஸை கொடுத்தது மாலினியா?"
"ஆமாம். எனக்கு அந்த அட்ரஸ் எப்படி தெரியும்? நேத்து பாஸ் டேபிள்ல அந்த சீட்டை நான் பார்த்தப்போ, இவங்க தான் எனக்கு அட்ரஸை சொன்னாங்க"
"எஸ்ஆர்கே எழுதின மெசேஜை நீ பாத்தீயா?" என்றான் மாலினியிடம்.
மென்று முழங்கியபடி ஆமாம் என்று தலையசைத்தாள் மாலினி.
"பேரை மென்ஷன் பண்ணாம ஒரு மெசேஜை எஸ்ஆர்கே எழுதினா, அது எனக்கு தான்னு உனக்கு தெரியாதா?"
"எனக்கு தெரியும். ஒருவேளை, அவருடைய பழக்கத்தை அவர் மாத்திகிட்டாரோன்னு நினைச்சேன். அவர் தான் புதுசு புதுசா ரூல்ஸ் எல்லாம் போடுறாரே..." என்று சமாளித்தாள் மாலினி.
குகன் ஏதோ சொல்ல முயல அவனை தடுத்தாள் மிதிலா.
"பரவாயில்லை விடுங்க, குகா"
நிம்மதிப் பெருமூச்சு விட்டபடி அங்கிருந்து சென்ற மாலினியை முறைத்தபடி நின்றான் குகன்.
"எதுக்காக இவ்வளவு கோவபடுறீங்க குகா?"
"ஒருத்தரோட வழிகாட்டுதல் இல்லாம உங்களால அந்த இடத்துக்கு போயிருக்க முடியாதுன்னு நான் சந்தேகப்பட்டேன். அது இப்போ சரியா போச்சு. இவ இவ்வளவு மோசமானவளா இருப்பான்னு நான் எதிர்பார்க்கல"
YOU ARE READING
என்னை ஏதோ செய்து விட்டாள்...! ( முடிவுற்றது)✔️
Romanceஅவர்கள் பணத்தாலும் தகுதியாலும் நேர் எதிரான வித்தியாசம் கொண்டவர்கள். அவனுடைய கவனம் முழுவதும் பணத்தின் மீதும் கௌரவத்தின் மீதும் மட்டுமே... ஆனால் அவளோ, வாழ்க்கையின் சிறுசிறு சந்தோஷங்களிலும் நனைந்து திளைப்பவள்... அதீதமான கடவுள் நம்பிக்கை கொண்டவள்... மித...