18 சூழும் திட்டங்கள்
இதற்கிடையில் பூவனம்,
நர்மதாவை தன்னுடைய இலக்காய் நிர்ணயித்துவிட்ட லயா, அவளை தேடிக் கொண்டு வந்தாள். நர்மதா, பாட்டியின் அறையில், ஏதோ மும்முரமாய் பேசிக்கொண்டிருந்ததை தெரிந்து கொண்டு, ஒளிந்து நின்று அவர்கள் என்ன பேசுகிறார்கள் என்று ஒட்டு கேட்டாள்.
"இல்ல பாட்டி. நான் அதை செய்ய மாட்டேன்" என்றாள் நர்மதா.
"அட... சொல்றதைக் கேளு. பாரு, அது எப்ப வேணும்னாலும் உடையிற மாதிரி இருக்கு" என்றார் நர்மதாவின் கையில் இருந்த மோதிரத்தை பார்த்தபடி பாட்டி.
"இந்த மோதிரத்தை போட்டுக்கிட்டே நான் எல்லா வேலையும் செய்யறேன் இல்லையா... அதனால தான் அது தேஞ்சி போயிடுச்சி" என்றாள் கவலையாக நர்மதா.
"அதனால தான் சொல்றேன், அதை மாத்திடுன்னு"
"இது என்னுடைய கல்யாண மோதிரம் பாட்டி. அவர் எனக்கு ஆசையா போட்டது. இந்த மோதிரத்தோட எனக்கு நிறைய சென்டிமென்ட் இருக்கு. இதை என்னால மாத்த முடியாது, பாட்டி"
"உன் இஷ்டம்" என்றார் பாட்டி.
"நான், நம்ம ராமுவுக்காக ஒரு பூஜை ஏற்பாடு பண்ணலாம்னு இருக்கேன்"
"திடீர்னு என்ன பூஜை?" என்றார் பாட்டி.
"நேத்து அவன் ரொம்ப அப்செட்டா இருந்தான். வாழ்க்கையிலேயே முதல் தடவையா, அவன் கையாலாகாம இருந்ததை போல நான் உணர்ந்தேன். அவ்வளவு டென்ஷனா இருந்தான். அவன் எல்லாத்தையுமே ரொம்ப தைரியமா ஃபேஸ் பண்றவன். நேத்து ஏன் அப்படி இருந்தான்னு எனக்கு புரியல" என்றாள் நர்மதா கவலையுடன்.
"அப்படியா? வியாபாரம் சம்பந்தபட்டதா இருந்தா கூட, அவன் அதை பத்தி எல்லாம் ரொம்ப கவலைப்பட மாட்டானே..." என்றார் பாட்டி யோசனையுடன்.
"அது தான் எனக்கும் கவலையா இருக்கு. அவன் எதையுமே வெளிப்படையா சொல்லக்கூட மாட்டான். அதனால தான், அவன் பேர்ல கோவில்ல ஒரு பூஜை பண்ணலாம்னு இருக்கேன்"
YOU ARE READING
என்னை ஏதோ செய்து விட்டாள்...! ( முடிவுற்றது)✔️
Romanceஅவர்கள் பணத்தாலும் தகுதியாலும் நேர் எதிரான வித்தியாசம் கொண்டவர்கள். அவனுடைய கவனம் முழுவதும் பணத்தின் மீதும் கௌரவத்தின் மீதும் மட்டுமே... ஆனால் அவளோ, வாழ்க்கையின் சிறுசிறு சந்தோஷங்களிலும் நனைந்து திளைப்பவள்... அதீதமான கடவுள் நம்பிக்கை கொண்டவள்... மித...