19 மோதிரம்

2K 100 17
                                    

19 மோதிரம்

மறுநாள் ஞாயிற்றுக்கிழமை

இடைவிடாமல் அழுதுகொண்டிருந்தாள் நர்மதா. அவளுடைய திருமண மோதிரத்தை காணவில்லை. அவள் தான் எளிதில் உணர்ச்சிவசப்படக் கூடியவள் ஆயிற்றே...! அவளுக்கு சென்டிமென்ட் விஷயத்தில் அதீத நம்பிக்கை உண்டு. எல்லோரும் மூலை முடுக்கெல்லாம் மும்முரமாய் தேடிகொண்டிருந்தனர்.

"எங்க வச்ச நர்மதா?" என்றார் பாட்டி.

"ட்ரெஸ்ஸிங் டேபிள் மேல, மத்த ஜூவெல்ஸ் கூட வச்சேன் பாட்டி. குளிச்சிட்டு வந்து பாத்த போது, ரிங் மட்டும் இல்ல" என்று அழுதாள்.

"அழாதே நர்மதா. தேடி கண்டுபிடிச்சிடலாம்" என்றார் புஷ்பா.

"அக்கா ப்ளீஸ் அழதீங்க" என்று கெஞ்சினான் ஸ்ரீராம்.

"இல்ல ராமு, அது என்னோட வெட்டிங் ரிங். ஏதோ தப்பா தோணுது. தினேஷ்க்கு ஏதாவது ஆயிடுமோன்னு பயமா இருக்கு" என்றாள் கண்ணீர் சிந்தியபடி.

தன் கண்களை சுழற்றினான் ஸ்ரீராம். அவனது அக்காவும், அவளது செண்டிமெண்டும்...! அவளை, அவளது வார்த்தைகளை வைத்தே மடக்க நினைத்தான் ஸ்ரீராம்.

"அக்கா, நீங்க தானே சொல்லுவீங்க, நம்ம ஏதாவது ஒன்னை இழந்தா, அதைவிட பெட்டரான ஒன்னை நமக்கு கடவுள் குடுப்பார்னு...?"

"பெட்டரா? என்னோட வெட்டிங் ரிங்கை விட எது பெட்டாரா இருக்க முடியும்?"

"இந்த கேள்விக்கு என்கிட்ட பதில் இல்ல. உங்க கடவுளை நம்புங்க" என்றான் ஸ்ரீராம்.

"ராமு சொல்றது உண்மை தான் நர்மதா. சீக்கிரமாவே நீ தெரிஞ்சிக்குவ இதுக்கு என்ன காரணம்னு" என்று அவளை சமாதான படுத்த முயன்றார் புஷ்பா.

நர்மதாவுக்கு திருப்தி ஏற்படவில்லை என்றாலும், ஸ்ரீராமை வருத்தபட வைக்க அவள் விரும்பதாதால் சரி என்று தலையசைத்தாள்.

போதுமான அளவிற்கு நர்மதாவை அழ வைத்த பின், மோதிரத்தை அவளிடம் திருப்பித் தந்துவிடுவது என்று முடிவு செய்தாள் லயா. ஆம், அவள் தான் நர்மதாவிடமும், மற்றவர்களிடமும் நல்லெண்ணத்தை பெற, அதை நர்மதாவுக்கு தெரியாமல் திருடி வைத்திருந்தது. அவள் மோதிரத்தை திருப்பி தரும் போது, நர்மதா அவளை வானுயர புகழ போகிறாள்...! மனதார நன்றி தெரிவிக்க போகிறாள்...! அனைவரது கவனமும் அவள் பக்கம் திரும்ப போகிறது, ஸ்ரீராமையும் சேர்த்து. தன் அக்காவின் சந்தோஷத்தை திரும்ப வரவழைத்ததற்காக ஸ்ரீராம் அவளுக்கு நன்றி கூறுவான். நிச்சயம் இந்த சம்பவம் அவனிடம் நல்லெண்ணத்தை ஏற்படுத்தும். அவனுடன் தனது நட்புறவை தொடர, இந்த ஒரு சந்தர்ப்பம் போதுமானது. இதற்கு பின் அவளை அவனால் தவிர்க்கவே முடியாது. ஏனென்றால், இதன் பிறகு,  நிச்சயம் நர்மதா அவள் பக்கம் தான் இருப்பாள். தன் கண்ணிலிருந்து கண்ணீர் வந்தால் நர்மதாவால் பொறுக்க முடியாது. இவற்றையெல்லாம் எண்ணியபடி, தன் அறைக்குச் சென்றாள் லயா, மோதிரத்தை கொண்டுவர.

என்னை ஏதோ செய்து விட்டாள்...! ( முடிவுற்றது)✔️Where stories live. Discover now