20 தீர்வு

2K 95 12
                                    

20 தீர்வு

அழுதுகொண்டிருந்த நர்மதாவை பார்த்து அமைதியாய் நின்றாள் மிதிலா. தன்னை சுதாகரித்துக் கொண்டு, மிதிலாவை பார்த்து லேசாக புன்னகை புரிந்தாள் நர்மதா. நர்மதாவின் கண்ணீரை நிறுத்த வழி தெரியாமல், அங்கு சோகமாய் இருந்த அனைவரும் அதையே செய்தார்கள். தனது தோழியை பார்த்தவுடன் குதூகலமானான் லட்சுமன். அப்பொழுது குகன் கூறிய வார்த்தைகள் அவனுக்கு ஞாபகம் வந்தது. மிதிலாவை இங்கு அனுப்பியது குகனா? ஏனென்றால், காரணமில்லாமல் மிதிலா பூவனம் வரமாட்டாள். அதுவும் ஸ்ரீராம் இருக்கும் போது நிச்சயம் வரமாட்டாள். காரணம் எதுவாக வேண்டுமானாலும் இருக்கட்டும், அனைத்தையும் மறந்து அவள் இங்கு வந்துவிட்டது சந்தோஷம் என்று நினைத்தான் லக்ஷ்மன். அவன் அவளை நோக்கி ஓடினான்.

"குகா ஃபோன் பண்ணானா?"

ஆமாம் என்று தலையசைத்தாள் மிதிலா.

"விஷயம் என்னன்னு உனக்கு சொன்னானா?"

"மேலோட்டமா..."

"அக்காவோட கல்யாண மோதிரம் காணோம். மாமாவுக்கு ஏதாவது ஆயிடுமோன்னு நினைச்சு அவங்க பயந்து அழுதுகிட்டு இருக்காங்க. அவங்க ரொம்ப சென்டிமென்ட். எல்லாத்துக்கும் சீக்கிரம் அப்செட் ஆயிடுவாங்க. அவங்களை எப்படி சமாதானப்படுத்துறதுன்னே எங்களுக்கு புரியல. ராமுவும், மாமாவும் கூட ட்ரை பண்ணி பாத்துட்டாங்க" என்றான் சோகமாக.

"ஒ..." என்று ஆழமாய் யோசித்தாள்.

"எங்க மூளை எல்லாம் வேலையே செய்யல... உன்னால ஏதாவது செய்ய முடியுமா?"

முடியும் என்று தலையசைத்தாள்.

"நிஜமாவா?"

"ஆனா, என்னுடைய ஐடியா பலன் கொடுக்குமான்னு எனக்கு தெரியல"

"பரவாயில்ல ட்ரை பண்ணி பாரு"

"சரி "

"வா"

அவர்கள் நர்மதாவை நோக்கி நடக்க, நர்மதாவுக்கு பக்கத்தில் அமர்ந்திருந்த அவளது கணவன் தினேஷ், மிதிலாவை பார்த்து *ஏதாவது செய்யேன்* என்று கண்களால் ஜாடை காட்டினான். அவனை நோக்கி கண் இமைத்தாள் மிதிலா.

என்னை ஏதோ செய்து விட்டாள்...! ( முடிவுற்றது)✔️Where stories live. Discover now