21 உரிமை...?
பழச்சாறை எடுத்துக்கொண்டு ஸ்ரீராமின் அறைக்குச் சென்ற மிதிலாவை, சத்தமில்லாமல் பின்தொடர்ந்தார் புஷ்பா. ஸ்ரீராமின் மனதில் என்ன இருக்கிறது என்று தெரிந்து கொண்டே தீர வேண்டும் அவருக்கு.
கண்களை மூடி, சோபாவில் சாய்ந்தபடி அமர்ந்திருந்தான் ஸ்ரீராம். அவனுடைய குடும்பத்தினர் அனைவரும் மிதிலாவுடன் சந்தோஷமாக இருக்கிறார்கள், அவன் ஒருவனைத் தவிர. ஆனால், அதைப் பற்றி அவனுக்கு என்ன கவலை? அவள் எப்பொழுது பூவனம் வந்தாலும், அனைவரும் அவளுடன் தானே இருப்பார்கள்...? ஆனால், ஸ்ரீராம் வீட்டில் இருக்கும் பொழுது அவள் இங்கு வருவது இது தான் முதல் முறை. அவர்கள் அனைவரும் வரவேற்பறையில் இருந்திருந்தால், அவனும் கூட அவர்களுடன் தான் இருந்திருப்பான். ஆனால், இந்த மூளை இல்லாத லக்ஷ்மன், அவளை தன் அறைக்கு அழைத்துச் சென்றுவிட்டான். அனைவரும் அவர்கள் பின்னால் சென்று விட்டார்கள், அவனை மட்டும் தனியாய் விட்டு விட்டு...
தனியாக விட்டுவிட்டா? மிஸ்டர் ஸ்ரீராம் கருணாகரனுக்கு என்ன ஆகிவிட்டது? எப்போதிலிருந்து அவன் தனியாக இருப்பதை பற்றி கவலைப்பட ஆரம்பித்தான்? அவன் எப்பொழுதும் அப்படி இருக்க விரும்புபவன் தானே? அவனுடைய எண்ணம் அவனுக்கே விசித்திரமாய் இல்லையா?
ஸ்ரீராம் இதையெல்லாம் பற்றி யோசித்துக் கொண்டிருந்த அதே நேரம்,
அவனுடைய அறையின் கதவை தட்டினாள் மிதிலா, அவன் அறையின் கதவு திறந்தே இருந்தபோதிலும். புஷ்பா, சுப்பிரமணியிடம் அவனுக்கு சாப்பிட ஏதாவது கொடுத்து அனுப்பி இருப்பார் என்று எண்ணிய ஸ்ரீராம்,
"உள்ள வா..." என்றான் கண்களை திறக்காமல்.
உள்ளே நுழையாமல் அங்கேயே நின்றாள் மிதிலா. வந்திருப்பது தான்தான் என்று அவனுக்கு தெரியுமா என்ற சந்தேகம் அவளுக்கு இருந்தது. அதனால், மீண்டும் ஒரு முறை கதவை தட்டினாள்.
"உள்ள வான்னு சொல்..." என்று, பல்லைக் கடித்துக் கொண்டு கண்களைத் திறந்த ஸ்ரீராம், பழச்சாறு டம்ளருடன் மிதிலா நின்றிருப்பதை பார்த்து, வாக்கியத்தை முடிக்காமல் விட்டான். வந்திருப்பது உண்மையிலேயே மிதிலா தானா, அல்லது அவன் கனவு காண்கிறானா? அவளை நம்ப முடியாத பார்வை பார்த்துக் கொண்டிருந்தான் ஸ்ரீராம்.
YOU ARE READING
என்னை ஏதோ செய்து விட்டாள்...! ( முடிவுற்றது)✔️
Romanceஅவர்கள் பணத்தாலும் தகுதியாலும் நேர் எதிரான வித்தியாசம் கொண்டவர்கள். அவனுடைய கவனம் முழுவதும் பணத்தின் மீதும் கௌரவத்தின் மீதும் மட்டுமே... ஆனால் அவளோ, வாழ்க்கையின் சிறுசிறு சந்தோஷங்களிலும் நனைந்து திளைப்பவள்... அதீதமான கடவுள் நம்பிக்கை கொண்டவள்... மித...