22 டீல்
தனது குடும்ப பெண்களின் பேச்சை அசைபோட்டபடி தன் அறைக்கு வந்தான் ஸ்ரீராம். அவனுக்கு கவனம் எதிலும் செல்லவில்லை. அவனது எண்ணங்கள் யாவும் மிதிலாவை சுற்றியே சுழன்று கொண்டிருந்தது. அவனிடம் நற்குணங்கள் என்று எதுவுமே இல்லையா? மிதிலா நல்ல பெண் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் அதற்காக, அவன் மோசம் என்றும் சொல்வதற்கு இல்லையே...!
அவனது எண்ணச் சங்கிலி அறுபட்டது, கைப்பேசி அழைப்பின் சத்தத்தைக் கேட்டு. அந்த அழைப்பு, குகனிடம் இருந்து வந்தது.
"சொல்லு குகா..."
"நல்ல வேளை, இப்பயாவது என்னுடைய ஃபோனை எடுத்தியே..."
"நீ எனக்கு கால் பண்ணியிருந்தியா?"
"எத்தனை தடவை...? நீ உன்னோட மொபைலை செக் பண்ணலையா?"
ஆம், அவனுக்கு தன் கைபேசியை எடுத்து பார்க்க வேண்டும் என்று கூட தோன்றவில்லை.
"சரி, எதுக்கு எனக்கு ஃபோன் பண்ண சொல்லு"
"உனக்கு ஞாபகம் இருக்கா, பதினஞ்சு நாளைக்கு முன்னாடி, நம்ம ஒரு டீலை வேண்டாம்னு ஒதுக்கினோம்..."
"ஆமாம், அது ரொம்ப சின்ன டீல். நம்ம ஏற்கனவே நிறைய பெரிய டீல் ஸைன் பண்ணி இருக்கிறதால, அது வேண்டாம்னு நினைச்சோம்"
"என்னோட சோர்ஸ் சொல்லுது, அந்த டீலை எடுக்க, வேலாயுதம் ட்ரை பண்றாராம்"
"என்னது... வேலாயுதமா?"
"ஆமாம். அவர் டெண்டரை கடைசி நிமிஷத்துல சப்மிட் பண்ண பிளான் பண்ணி இருக்காராம். அப்போ தானே, அவரோட நம்ம போட்டி போட முடியாம போகும்... அவர் ஈசியா அந்த டீலை பிடிச்சுடலாம் இல்ல...?"
"லாஸ்ட் டேட் என்னைக்கு?"
"நாளைக்கு... அவர் நாளைக்கு சாயங்காலம் அஞ்சரைக்கு மணிக்கு டெண்டரை சப்மிட் பண்ண போறாராம்."
"வி ஆர் இன். டெண்டர் டீடைல்ஸை கலெக்ட் பண்ணு..."
"ஓகே எஸ்ஆர்கே"
அழைப்பை துண்டித்தான் ஸ்ரீராம். இப்பொழுது அவனுடைய எண்ணத்தில் வேறு எதுவுமே இல்லை. அவனுடைய எண்ணம் முழுவதுமாய் வேலாயுதத்தின் பக்கம் திரும்பிவிட்டது. வேலாயுதம் வேறுயாருமல்ல, ஸ்ரீராமின் அப்பாவுடைய வியாபார கூட்டாளி. ஸ்ரீராமின் பெற்றோர்கள் விபத்தில் காலமான பொழுது, அவர்களுடைய நிறுவனத்தையும், அனைத்து பங்குகளையும் தனதாக்கிக் கொண்டார் வேலாயுதம். வேலாயுதத்தால் தான் ஸ்ரீராமும், நர்மதாவும் தங்களது சொத்துக்களை இழந்தார்கள். அவருக்கு பாடம் கற்பிக்கத் தான் காத்திருந்தான் ஸ்ரீராம். இதோ, அந்த சந்தர்ப்பம் வந்துவிட்டது.
YOU ARE READING
என்னை ஏதோ செய்து விட்டாள்...! ( முடிவுற்றது)✔️
Romanceஅவர்கள் பணத்தாலும் தகுதியாலும் நேர் எதிரான வித்தியாசம் கொண்டவர்கள். அவனுடைய கவனம் முழுவதும் பணத்தின் மீதும் கௌரவத்தின் மீதும் மட்டுமே... ஆனால் அவளோ, வாழ்க்கையின் சிறுசிறு சந்தோஷங்களிலும் நனைந்து திளைப்பவள்... அதீதமான கடவுள் நம்பிக்கை கொண்டவள்... மித...