23 ராஜகுமாரன்
மிதிலாவுக்கு ஃபோன் செய்தாள் நர்மதா. அந்த அழைப்பை உடனடியாக ஏற்றாள் மிதிலா.
"ஹாய் அக்கா, எப்படி இருக்கீங்க?"
"நல்லா இருக்கேன். கோவிலுக்கு வந்திருக்கோம் புது மோதிரத்தோட"
"ரொம்ப சந்தோஷம் கா. கோயிலுக்கு போயிருக்கிங்க. அப்படியே ரொம்ப விரும்புற ஏதாவது ஒன்னை வேண்டிக்கிட்டு வாங்க..."
"நிச்சயமா, மிதிலா..."
"பைனாப்பிள் கேசரி சூப்பர்"
"அடக்கடவுளே, லக்ஷ்மன் அதை உங்களுக்கு கொண்டுவந்து கொடுப்பான்னு தெரிஞ்சிருந்தா, நான் இன்னும் கொஞ்சம் கொடுத்து அனுப்பி இருப்பேனே..."
"இல்லக்கா. அதுவே போதும். அதுக்கே உங்க தம்பிகிட்ட வாங்கி கட்டிக்கிட்டேன்..." என்று சிரித்தாள்.
"ஆனா, அவன் தானே அதை உங்களுக்கு கொண்டு வந்தான்...?"
"இல்ல, இல்ல, நான் லக்கியை பத்தி பேசல..."
"அப்போ, நீங்க வேற யாரை பத்தி பேசுறீங்க? "
"வேற யாரு...? ஜூனியரை பத்தி தான்"
"உங்களை ராமுவா திட்டினான்?"
"அவரே தான்..."
"சில சமயம், அவனை புரிஞ்சுக்கவே முடியிறதில்ல"
"எப்பவும் தான்..." என்று அவள் முணுமுணுத்தது நர்மதாவின் காதில் விழுந்தது.
"சரிங்க கா. நான் உங்ககிட்ட அப்புறம் பேசுறேன். கொஞ்சம் வேலை இருக்கு"
"ஆமாம்... உங்க சிடுமூஞ்சி பாஸை பத்தி தான் எனக்கு தெரியுமே, நீங்க வேலையை பாருங்க" என்றாள் நர்மதா.
அழைப்பை துண்டித்தாள் மிதிலா. நர்மதாவும் அழைப்பை துண்டித்தாள் தான், ஆனால், அவளது எண்ணம், மிதிலா கூறிய வார்த்தைகளில் இருந்து துண்டிக்கப்பட வில்லை. எப்பொழுதும், அவளுடைய தம்பி அடுத்தவர்களுடைய விருப்பு வெறுப்புகளில் தலையிடுவது கிடையாது. நேற்று கூட, பரத் மிதிலாவுக்கு ஜாங்கிரியை ஊட்டிவிட முயன்ற போது, அதை அவன் கையிலிருந்து பிடுங்கி விட்டான் இல்லையா ராமு...!
YOU ARE READING
என்னை ஏதோ செய்து விட்டாள்...! ( முடிவுற்றது)✔️
Romanceஅவர்கள் பணத்தாலும் தகுதியாலும் நேர் எதிரான வித்தியாசம் கொண்டவர்கள். அவனுடைய கவனம் முழுவதும் பணத்தின் மீதும் கௌரவத்தின் மீதும் மட்டுமே... ஆனால் அவளோ, வாழ்க்கையின் சிறுசிறு சந்தோஷங்களிலும் நனைந்து திளைப்பவள்... அதீதமான கடவுள் நம்பிக்கை கொண்டவள்... மித...