24 எதிரி உரைத்த பொய்

1.9K 100 20
                                    

24 எதிரி உரைத்த பொய்

தனது அறையில் இங்கும் அங்கும் உலவிக் கொண்டிருந்தான் ஸ்ரீராம். எப்படி மிதிலா, அவன் அவளது ராஜகுமாரனாக இருக்க முடியாது என்று கூறலாம்? அவன் எப்படிப்பட்டவன் என்பதை அவள் எப்படி முடிவு செய்யலாம்? அவன் சிறிது சிடுமூஞ்சி தான்... ஆனால், அவனுக்கு சிரிக்கவே தெரியாது என்று கூறுவதெல்லாம் ஒப்புக் கொள்வதற்கு இல்லை. நீண்ட மூச்சை இழுத்துவிட்டு தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டான். தன் பலவீனத்தை எப்படி பலமாக மாற்றுவது என்று அவனுக்கு தெரியும்.

....

மிதிலா, தனது கணினியில் எதையோ தட்டச்சு செய்து கொண்டிருந்த போது அங்கு வந்தாள் சௌமியா.

"ஹாய் சௌமியா..."

"எனக்கு ஒரு மணி நேரம் பர்மிஷன் கிடைச்சிருக்கு. நான் வீட்டுக்குப் போறேன். இன்னைக்கு கூடாரவல்லி இல்லையா..." என்றாள்

"சரி, நீங்க கிளம்புங்க சௌமியா"

"நீங்களும் பர்மிஷன் கேட்டு பாருங்களேன். நம்ம ரெண்டு பேரும் சேர்ந்தே போகலாம்"

"இல்ல சௌமியா, என்னால முடியாது. எனக்கு முக்கியமான வேலை இருக்கு. அது சரி, உங்களுக்கு எப்படி பர்மிஷன் கிடைச்சது? ஒரு வாரம் லீவுக்கு பிறகு, இன்னைக்கு தானே நீங்க வேலைக்கு திரும்ப வந்தீங்க?"

"குகன் சார்கிட்ட கேட்டேன், அவர் பர்மிஷன் குடுத்துட்டாரு"

பெருமூச்சு விட்டாள் மிதிலா.

"என்ன ஆச்சு மிதிலா?"

"ஒன்னும் இல்ல" என்று மீண்டும் பெருமூச்சு விட்டாள்.

"சரி, நான் கிளம்பறேன்" என்று அங்கிருந்து சென்றாள் சௌமியா.

சௌமியா கொடுத்து வைத்தவள். குகனை போன்ற இனிமையான மனிதனிடம் அவளால் தனது விடுப்பு பற்றி பேசிக் கொள்ள முடிகிறது. ஆனால், இவள் கதையோ வித்தியாசமானது. அவள் ஒவ்வொரு முறையும் ஸ்ரீராமை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. என்று அலுத்துக் கொண்டாள். ஆனால், அவள் எதிர்பாராத வண்ணம், அவளுக்கு ஸ்ரீராமின் அறையில் ஆச்சரியம் காத்திருந்தது.

என்னை ஏதோ செய்து விட்டாள்...! ( முடிவுற்றது)✔️Where stories live. Discover now