25 மிக பெரிய டீல்

2K 102 20
                                    

25 மிக பெரிய டீல்

ஸ்ரீராமின் கோபம் விண்ணைத் தொட்டது. எப்படி மிதிலா அவனை ஏமாற்றலாம்? அவள் மற்றவரிடம் காட்டியது எல்லாம் வெறும் நடிப்பா? தன்னுடைய சுயநலத்திற்காக தான் அவள் மற்றவரிடம் தன்னை நல்லவளை போல் காட்டி கொண்டாளா? உலகமே இருண்டுவிட்டது போல் உணர்ந்தான் ஸ்ரீராம். மிதிலாவே நம்பகமற்றவள் என்றால், யாரைத் தான் நம்புவது?

வேலாயுதம் தன்னை நினைத்து பெருமைப்பட்டார். அவர் ஸ்ரீராமை இப்படி பார்த்ததில்லை. அன்று, அவர் ஒரு உண்மையை புரிந்து கொண்டார். உணர்வுகளால் கூட ஸ்ரீராமை வென்றுவிட முடியும் என்பது தான் அது. ஸ்ரீராமுக்கு மிதிலாவின் மீது விருப்பம் இருக்கிறது என்று மாலினி கூறிய போது அதை அவர் நம்பவில்லை. ஆனால் இப்போது, அவரால் அதை நம்பாமல் இருக்க முடியவில்லை. ஸ்ரீராமை வீழ்த்திவிட்டது அவருக்கு  கண்கூடாகத் தெரிந்தது. அவர் நினைத்தது தவறல்ல.

தனது வாழ்வின் மிகப்பெரிய டீலை இழந்து விட்டதாய் உணர்ந்தான் ஸ்ரீராம்... மிஸ் மிதிலா ஆனந்த்...! அவன் என்ன செய்யப்போகிறான் என்று புரியவில்லை அவனுக்கு. இந்த விஷயத்தை அவன் எப்படி கையாள போகிறான்? தனது உலகம், சுழற்சியை நிறுத்தி விட்டது போல் இருந்தது அவனுக்கு. இது போல் அவன் எப்போதுமே கையாலாகாமல் உணர்ந்ததில்லை. எந்த வியாபார ஒப்பந்தத்தை கைப்பற்ற அவன் அங்கு முனைப்புடன் வந்திருந்தானோ, எந்த ஒப்பந்தம் அவனுக்கு மிக முக்கியம் என்று நினைத்திருந்தானோ, அதை சுத்தமாய் மறந்து போனான்.

சட்டென்று அவனுக்கு பொறி தட்டியது. மிதிலா வேலாயுதத்துக்கு உதவியிருந்தால், அதை அவரே வலிய வந்து அவனிடம் ஏன் கூற வேண்டும்? அவன் மிதிலாவை போலீசில் ஒப்படைத்து விடுவான் என்று அவருக்கு தெரியாதா? ஸ்ரீராம் பலவீனமாய் உணர்ந்தான். மிதிலாவை போலீசில் ஒப்படைப்பதா? அவனால் எப்படி அதை செய்ய முடியும்? எவ்வளவு இக்கட்டான நிலைகளில் அவள் அவனுக்கு உதவி இருக்கிறாள்...? இப்படித் தான் பணம் சம்பாதிக்க வேண்டும் என்று அவள் நினைத்திருந்தால், இதற்கு முந்தைய வியாபார ஒப்பந்தங்களில் அதை அவளால் செய்திருக்க முடியுமே...! அவையெல்லாம் இதைவிட மிகப்பெரிய ஒப்பந்தங்கள் ஆயிற்றே...! அவனுக்கு குழப்பம் ஏற்பட்டது. இப்போது, இந்த ஒப்பந்தத்தை கைப்பற்றுவதை விட, மிதிலா, தவறானவளாக இருந்துவிடக் கூடாது என்பதில் தான் அவன் கவனம் இருந்தது. ஆம், சிறிது நேரத்திற்கு முன்பு வரை, அவன் முக்கியமானதாக நினைத்துக்கொண்டிருந்த ஒப்பந்தம், இப்போது மிதிலாவுக்கு முன் ஒன்றும் இல்லாமல் போனது. அவள் உண்மையானவளாக இருக்க வேண்டும். அது தான் அவனுக்கு வேண்டும். அது மட்டும் தான் அவனுக்கு வேண்டும்.

என்னை ஏதோ செய்து விட்டாள்...! ( முடிவுற்றது)✔️Where stories live. Discover now