27 பரிசு
பூவனம்
பரத்தையும், லட்சுமணனையும், வாயைப் பிளந்துகொண்டு நம்பமுடியாமல் பார்த்துக் கொண்டிருந்தார்கள் அவர்களது குடும்பத்தினர். ஸ்ரீராம் அனைவருக்கும் பார்ட்டி கொடுக்கிறான் என்றால், யாரால் தான் நம்ப முடியும்? வழக்கமாய் பார்ட்டியை பற்றி பேசுபவர்களை திட்டுவது ஸ்ரீராமின் வழக்கம். அவர்களுடைய ராமு, இப்போதெல்லாம் ராமுவாகவே இல்லை...!
இதற்கு மறைமுகமான ஒரு காரணம் நிச்சயம் இருக்கும் என்று எண்ணினாள் நர்மதா.
"அண்ணன், வேலாயுதத்துடைய வீழ்ச்சியை கொண்டாட போறாரு" என்றான் பரத் சந்தோஷமாக.
"ஆமாம்... வேலாயுதம், நம்ம கம்பெனி ஸ்டாஃபுக்கு லஞ்சம் கொடுத்து டெண்டரை எடுக்க நினைச்சார். அவங்க ரெண்டு பேரையுமே அரெஸ்ட் பண்ணியாச்சு" என்றான் லக்ஷ்மன்.
"நிஜமாவா?" என்றாள் நர்மதா ஆவலுடன்.
"ஆமாம் கா. மிதிலா தான் அவங்களை கையும் களவுமா பிடிச்சா..."
"மிதிலாவா?" அனைவரும் ஒரே நேரத்தில் அவளது பெயரை கேள்வியாய் எழுப்பினார்கள்.
"ஆமாம்" என்று தன் காலரை தூக்கி விட்டுக் கொண்டான் லக்ஷ்மன் பெருமையுடன்.
"லக்கி, அவங்களை பிடிச்சது மிதிலா... நீ இல்ல..." என்று அவனை கிண்டல் செய்தான் பரத்.
"அதனால என்ன? அவ என்னோட ஃப்ரெண்ட். அவளுடைய எல்லா வெற்றியையும் நான் சந்தோஷமா கொண்டாடுவேன். அவளுடைய எல்லா கஷ்டத்துலயும் அவளுக்கு பக்கத் துணையா இருப்பேன்..." என்றான் லக்ஷ்மன் நல்ல நண்பனாக.
அப்பொழுது, ஸ்ரீராம் உள்ளே வருவதை அவர்கள் கவனித்தார்கள். ஒரு கையில், தனது மடிக்கணினியின் பையையும், மற்றொரு கையில் தனது கோட்டையும் ஏந்தியபடி வந்தான் ஸ்ரீராம். வரவேற்பறை அமைதியானது.
"நாங்க கேள்விப்பட்டது உண்மையா ராமு?" என்றாள் நர்மதா.
"நீங்க என்ன கேள்விபட்டீங்க?" என்றான் முகத்தில் எந்த பாவத்தையும் காட்டாமல்.
YOU ARE READING
என்னை ஏதோ செய்து விட்டாள்...! ( முடிவுற்றது)✔️
Romanceஅவர்கள் பணத்தாலும் தகுதியாலும் நேர் எதிரான வித்தியாசம் கொண்டவர்கள். அவனுடைய கவனம் முழுவதும் பணத்தின் மீதும் கௌரவத்தின் மீதும் மட்டுமே... ஆனால் அவளோ, வாழ்க்கையின் சிறுசிறு சந்தோஷங்களிலும் நனைந்து திளைப்பவள்... அதீதமான கடவுள் நம்பிக்கை கொண்டவள்... மித...