30 மிதிலாவின் எதிர்செயல்

2K 107 18
                                    

30 மிதிலாவின் எதிர்செயல்

"நான் மிதிலாவை கல்யாணம் பண்ணிக்க விரும்புறேன்"

என்ற ஸ்ரீராமின் வார்த்தைகள் அவனது குடும்பத்தாரை திடுக்கிடச் செய்தது. அவனுக்கு மிதிலாவின் மீது விருப்பம் இருக்கிறது என்பதை சிலர் ஏற்கனவே அறிந்து தான் இருந்தார்கள். ஆனால், அவன் இவ்வளவு சீக்கிரம் அவளை திருமணம் செய்துகொள்ள வேண்டுமென்று கூறுவான் என்பது தான் அவர்கள் எதிர்பாராதது.

"மிதிலாவா?" என்றாள் நர்மதா

"ஆமாக்கா, நான் மிதிலாவை கல்யாணம் பண்ணிக்க நினைக்கிறேன்" என்றான் திடமாக.

"நீ என்ன கேக்குறேன்னு தெரிஞ்சு தான் கேக்குறியா ராமு?" என்றான் லட்சுமணன் அதிர்ச்சியுடன்.

"ஏன்? நான் அவங்களை கல்யாணம் பண்ணிக்க கூடாதா?" என்றான் கோபமாக.

"ஆனா, அண்ணா... உங்க ரெண்டு பேருக்கும் நடுவுல எந்த டேர்ம்ஸுமே ஒத்துப் போகலயே..." என்றான் பரத். மிதிலா, ஸ்ரீராமை பற்றி என்ன நினைக்கிறாள் என்பதை அவன் நன்கு தெரிந்து வைத்திருந்ததால்.

"எந்த டேர்ம்ஸ் ஒத்துப் போகல...? கிண்டலா பேசுறது, ஜோக் அடிக்கிறது, கூட சேர்ந்து சிரிக்கிறது, ஒன்னா உட்கார்ந்து சாப்பிடுறது... இதெல்லாமா? இதையெல்லாம் நான் உங்களோட கூட தான் செய்யறது இல்ல..." என்று விவாதித்தான் ஸ்ரீராம்.

"ஆனா, அவங்களுக்கு பிடிக்காத கல்யாணத்தை செஞ்சுக்க சொல்லி, அவங்களை நம்ம வற்புறுத்த முடியாது இல்லையா, அண்ணா?" என்றான் கெஞ்சலாக பரத்.

யாரும் எதிர்பாராத வண்ணம், தனக்கு சம்பந்தமில்லாத விஷயத்தில் லயா தன் மூக்கை நுழைத்தாள்.

"உங்க மேல விருப்பமில்லாத ஒருத்தரை கல்யாணம் பண்ணிக்கிறது நல்லது இல்ல..." என்றாள்.

"பாரு, அதை யார் சொல்றதுன்னு... அதை நீ சொல்றியா? மத்தவங்களுக்கு அறிவுரை சொல்றதுக்கு முன்னாடி, நீ அதை ஃபாலோ பண்றியான்னு யோசிச்சு பாரு..." என்று சீறினான் ஸ்ரீராம்.

என்னை ஏதோ செய்து விட்டாள்...! ( முடிவுற்றது)✔️Where stories live. Discover now