31 என்ன உண்மை?
லக்ஷ்மணனும், பரத்தும் தங்கள் அறைக்கு சென்றார்கள். பரத்தை பின் தொடர்ந்து சென்றாள் பிரியா. மறைந்து நின்று அவர்கள் பேசுவதை எல்லாம் கேட்டுக் கொண்டிருந்த லயாவுக்கு சந்தோஷம் தாங்கவில்லை. ஸ்ரீராமின் விருப்பத்திற்கு, அவன் குடும்பமே எதிராய் இருக்கிறதல்லவா...! அவளும் நிம்மதியுடன் தன் அறைக்குச் சென்றாள்.
பாட்டி, புஷ்பா, நர்மதா மட்டும் தினேஷுடன் அங்கேயே அமர்ந்திருந்தார்கள்.
"ஏன் இப்படி செஞ்ச நர்மதா? எதுக்காக ராமுவுடைய விருப்பத்துக்கு எதிரா பேசினீங்க? நம்ம தான் இதைப் பத்தி ஏற்கனவே பேசியிருந்தோமே. ராமு, மிதிலாவை விரும்புறது உனக்கு தெரியாதா?"
பாட்டியையும், புஷ்பாவையும் பார்த்தாள் நர்மதா.
"நீங்க என்ன நெனச்சுக்கிட்டு இருக்கீங்க மாப்பிள்ளை? நாங்க ராமுவோட விருப்பத்துக்கு எதிரா இருக்கோம்னு நினைக்கிறீங்களா?" என்றார் பாட்டி.
"நான் வேற எப்படி நினைக்கிறது பாட்டி?"
அதே நேரம், லேண்ட் லைன் ஃபோனின் மணி அடித்தது.
"மிதிலா தான் ஃபோன் பண்றான்னு நினைக்கிறேன்" என்றார் புஷ்பா புன்னகையுடன்.
ஆமாம் என்று தலையை அசைத்தபடி அதை எடுத்து பேசினாள் நர்மதா.
"ஹலோ... "
"ஐ அம் சாரி கா" என்ற மிதிலாவின் குரல், அவர்கள் எதிர்பார்த்தது சரி என்று கூறியது.
"எதுவும் சொல்லாம காலை கட் பண்ணிட்டேன். தயவு செய்து என்னை மன்னிச்சிடுங்க. நீங்க எல்லாரும் என்னை கிண்டல் செய்றீங்கன்னு நான் நெனச்சுட்டேன்"
"பரவாயில்லை விடுங்க..."
"ப்ளீஸ் ஃபோனை பாட்டிகிட்ட குடுங்க"
"ஒரு நிமிஷம்" பாட்டியிடம் போனை கொடுத்தாள் நர்மதா.
"என்னை மன்னிச்சிடுங்க பாட்டி. நான் உங்களை இன்சல்ட் பண்ணிட்டேன்னு நினைக்காதீங்க. நான் வேணும்னு செய்யல..."
YOU ARE READING
என்னை ஏதோ செய்து விட்டாள்...! ( முடிவுற்றது)✔️
Romanceஅவர்கள் பணத்தாலும் தகுதியாலும் நேர் எதிரான வித்தியாசம் கொண்டவர்கள். அவனுடைய கவனம் முழுவதும் பணத்தின் மீதும் கௌரவத்தின் மீதும் மட்டுமே... ஆனால் அவளோ, வாழ்க்கையின் சிறுசிறு சந்தோஷங்களிலும் நனைந்து திளைப்பவள்... அதீதமான கடவுள் நம்பிக்கை கொண்டவள்... மித...