33 தகிக்கும் கடந்த காலம்
தன் நெஞ்சில் சரிந்திருந்த மிதிலாவின் நிலையைப் பார்த்து கதிகலங்கிப் போனான் ஸ்ரீராம். அவளைத் தனது கையில் தூக்கிக்கொண்டு தலைமை அலுவலக கட்டிடம் நோக்கி ஓடினான். தீ விபத்தை பற்றிய செய்தி, ஸ்ரீராமை விட வேகமாய் அந்த அலுவலகத்தை வந்தடைந்தது. என்ன நடந்தது என்பதை தெரிந்து கொள்ள, அனைவரும் தங்களுக்காக ஒதுக்கப்பட்டிருந்த அறைகளை விட்டு பரபரப்புடன் வெளியே வந்தார்கள். தனது பிஏ வை கையில் ஏந்தியபடி, தலைதெறிக்க ஓடி வந்த ஸ்ரீராமை அனைவரும் வியப்புடன் பார்த்தார்கள். தனது தோழியின் நிலை கண்டு பதறினான் லட்சுமன்.
"மிதிலா..." என்று அலறியபடி ஓடி வந்தான்.
"மிதிலாவுக்கு என்ன ஆச்சி ராமு?"
அவனுக்கு பதில் அளிக்காமல், தனது அறையில் இருந்து வெளியே வந்த குகனை பார்த்து,
"கால் த டாக்டர்... குயிக்..." என்று கத்தியபடி தன் அறையை நோக்கி ஓடினான் ஸ்ரீராம்.
உடனே தன் கைப்பேசியை எடுத்து, அருகில் இருந்த மருத்துவமனைக்கு ஃபோன் செய்தான் குகன். எஸ்ஆர் ஃபேஷன்சின் மேனேஜரிடம் இருந்து வந்த அழைப்பு என்பதால், உடனே கிளம்பினார் மருத்துவர். அழைப்பைத் துண்டித்துவிட்டு, ஸ்ரீராமின் அறைக்கு விரைந்தான் குகன்.
தனது அறையில் இருந்த சோபாவில் மிதிலாவை படுக்க வைத்து, அவள் முகத்தில் தண்ணீர் தெளித்தான் ஸ்ரீராம். ஆனால், அவளிடம் எந்த அசைவும் தென்படவில்லை.
"என்ன ஆச்சி எஸ்ஆர்கே?" என்றான் குகன்.
"நெருப்பை பார்த்து பயந்து மயங்கி விழுந்துட்டாங்க" என்றான் கவலை தோய்ந்த முகத்துடன்.
"அவளுக்கு காயப்பட்டுச்சா?" என்றான் லட்சுமன்.
"இல்ல, நெருப்புக்கு ரொம்ப பக்கத்துல நின்னுகிட்டு இருந்தாங்க. அதனால தான் நெர்வஸ் ஆயிட்டாங்க" அவளை எப்படிப்பட்ட நிலையில் அவன் பார்த்தான் என்பதை அவர்களிடம் கூறவில்லை ஸ்ரீராம்.
YOU ARE READING
என்னை ஏதோ செய்து விட்டாள்...! ( முடிவுற்றது)✔️
Romanceஅவர்கள் பணத்தாலும் தகுதியாலும் நேர் எதிரான வித்தியாசம் கொண்டவர்கள். அவனுடைய கவனம் முழுவதும் பணத்தின் மீதும் கௌரவத்தின் மீதும் மட்டுமே... ஆனால் அவளோ, வாழ்க்கையின் சிறுசிறு சந்தோஷங்களிலும் நனைந்து திளைப்பவள்... அதீதமான கடவுள் நம்பிக்கை கொண்டவள்... மித...