35 மேலும் இரண்டு புள்ளிகள்...

2K 95 12
                                    

35 மேலும் இரண்டு புள்ளிகள்...

சென்னை புறவழிச் சாலையில் சீறிப்பாய்ந்து சென்றது ஸ்ரீராமின் கார். சற்று நேரத்திற்கு முன் அவன் கேட்ட விஷயத்தில், அவன் மனம் உழன்று கொண்டிருந்தது. பணக்காரர்களைப் பற்றி மிதிலா பேசிய விஷயம் அவனை அடித்து நொறுக்கியது. ஏனென்றால், அவள் வார்த்தைகள் ஒவ்வொன்றும் அவனுடைய முந்தைய நடவடிக்கைகளை அவனுக்கு நினைவூட்டியது. காரணமே இல்லாமல் அவளை அவமானப்படுத்தியது... மரியாதை இல்லாமல் நடத்தியது... தனது கௌரவத்தை பறைசாற்றியது... மனித உணர்வுகளை விட பணத்திற்கு முக்கியத்துவம் வழங்கியது...

அவள் மனதில் இருந்த வேதனையை அறியாமல், அவளை மேலும் அவன் ரணபடுத்திவிட்டான். *கடந்தகாலம்* அவளுடன் ஆடிய கோரத்தாண்டவம் போதாதென்று, இவன் வேறு வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சி விட்டான். பிறகு எப்படி அவனை திருமணம் செய்து கொள்ள அவள் சம்மதிப்பாள்?

தனக்குத் தான் கசப்பான கடந்த காலம் இருக்கிறது என்று எண்ணியிருந்தான் அவன். ஆனால், மிதிலாவுடையதை ஒப்பிட்டுப் பார்க்கும் பொழுது, அவனுடையது ஒன்றுமே இல்லை. தன் அம்மாவின் கோர மரணத்தை கண்ணெதிரில் பார்த்ததால் தான், அவள் நெருப்பை பார்த்து பயந்து மயங்கி இருக்கிறாள். எவ்வளவு கொடுமை...! மனதில் எவ்வளவு வேதனை இருந்த போதும், அவள் தான் எவ்வளவு உயிர்ப்புடன் இருக்கிறாள்...! தனது கடந்த காலத்தை பழித்துக்கொண்டு, தனக்கு பிரியமானவர்களிடம் கூட பேசி சந்தோஷப்பட நேரம் ஒதுக்காத தான் எங்கே... தனது வலியை மறைத்துக் கொண்டு, தன்னைச் சுற்றி இருக்கும் அனைவரையும் சந்தோஷப்படுத்தி பார்க்கும் அவள் எங்கே...! அவள் அவனுக்கு வேண்டும்... அவன் வாழ்க்கைக்கு அர்த்தம் சொல்லவும், அவனது கேள்விகளுக்கு பதிலாகவும்...!

காரை நிறுத்திவிட்டு, கண்களை மூடி யோசித்தான் ஸ்ரீராம். தனது கொலைகார அப்பாவை பற்றி மற்றவரிடம் கூறி தலைகுனிய அவள் தயாராக இல்லை. அவள் தலை குனிய வேண்டிய அவசியமும் இல்லை. அவள் செய்யாத தவறுக்காக அவள் தலை குனிய வேண்டிய அவசியம் என்ன இருக்கிறது? தேவையே இல்லை.

என்னை ஏதோ செய்து விட்டாள்...! ( முடிவுற்றது)✔️Where stories live. Discover now