38 அக்கறை
ஸ்ரீராமின் குடும்ப பெண்களை தன் வீட்டில் பார்த்த மிதிலா, வாயடைத்து போனாள். அவர்கள் அவளை பார்த்து சிரிக்க, அவளும் சிரித்தாள்.
"எப்படி இருக்க மிதிலா?" என்றார்கள் ஒரே குரலில்.
"நான் நல்லா இருக்கேன்" என்றாள் சங்கடத்துடன்.
"நீ டயர்டா இருந்தா, போய் ஃபிரெஷ் ஆயிட்டு வா" என்றார் புஷ்பா.
மிதிலாவை நோக்கி ஓடிச் சென்ற சாந்தா, அவள் கரத்தை பற்றிக் கொண்டார்.
"ஆமாம், அவ கொஞ்சம் டயர்டா தான் இருக்கா... இதோ இப்போ வறோம்..."
மிதிலாவை கையைப் பிடித்து அவளது அறைக்கு அழைத்துச் சென்ற சாந்தா, அறையின் கதவை சாத்தி தாளிட்டார்.
"மிதிலா, ஸ்ரீராம் கருணாகரனுக்கு உன்னை பொண்ணு கேட்டு அவங்க வந்திருக்காங்க. உனக்கு இவ்வளவு பெரிய இடத்திலிருந்து சம்பந்தம் வந்திருக்குன்னு என்னால நம்பவே முடியல. யுவராஜுடைய சம்மந்தம் நம்ம கையை விட்டு போனப்போ, நான் மனசு உடைஞ்சு போயிட்டேன். தயவு செஞ்சி இந்த தடவை எதுவும் செஞ்சிடாத, மிதிலா. நீ எனக்கு செஞ்சு கொடுத்த சத்தியத்தை மறக்க மாட்டேன்னு நினைக்கிறேன். இந்த கல்யாணத்துக்கு ஒத்துக்கோ" அவளிடம் கெஞ்சினார் சாந்தா.
"உங்களுக்கு ஜூனியர் கருணாகரனை பத்தி தெரியுமா மா?" என்றாள் மிதிலா.
"இப்போ தான் அவர் உன்னை ரொம்ப விரும்புறார்னு தெரிஞ்சுக்கிட்டேன். இங்க வந்திருக்கிறவங்களை பார்த்தா, யுவராஜுடைய அம்மாவை மாதிரி தெரியல. இவங்க நிச்சயமா எந்த பிரச்சனையும் பண்ணமாட்டாங்கன்னு எனக்கு தோணுது"
"அப்படின்னா உண்மையை சொல்லிடலாமே..."
"மிதிலா..." அவள் முகத்தைத் தன்னை நோக்கி திருப்பி,
"நான் உன்னை எச்சரிக்கிறேன், மிதிலா... நீ மட்டும் அவங்கக்கிட்ட உண்மையை சொன்னா, உன் கூட சாகுற வரைக்கும் பேச மாட்டேன்" என்றார் காட்டமாக.
"அம்மா..."
"நான் சொன்னா சொன்னது தான்"
அந்த அறையை விட்டு வெளியேறினார் சாந்தா. தன் இயலாமை நிலையை உணர்ந்தாள் மிதிலா. அவளுக்கு தெரியும், ஸ்ரீராம் குடும்பத்துப் பெண்கள் எவ்வளவு இனிமையானவர்கள் என்று. யாராக இருந்தாலும், அவர்களை சீக்கிரமே பிடித்துப் போகும். அவளுடைய அம்மாவிற்கும் பிடித்து விட்டதில் ஆச்சரியம் இல்லை. அவளுக்கு இப்போது என்ன செய்வதென்று புரியவில்லை. குளியலறைக்கு சென்று முகம் கழுவிக்கொண்டு வெளியே வந்தாள்.
YOU ARE READING
என்னை ஏதோ செய்து விட்டாள்...! ( முடிவுற்றது)✔️
Romanceஅவர்கள் பணத்தாலும் தகுதியாலும் நேர் எதிரான வித்தியாசம் கொண்டவர்கள். அவனுடைய கவனம் முழுவதும் பணத்தின் மீதும் கௌரவத்தின் மீதும் மட்டுமே... ஆனால் அவளோ, வாழ்க்கையின் சிறுசிறு சந்தோஷங்களிலும் நனைந்து திளைப்பவள்... அதீதமான கடவுள் நம்பிக்கை கொண்டவள்... மித...