39 உடன்படிக்கை
தெரியாத எண்ணிலிருந்து தனக்கு வந்த அழைப்பை ஏற்ற ஸ்ரீராம், சில நொடி திகைத்தான், அந்தப் பக்கம் பேசியது, அவனுடைய வருங்கால மாமனார் என்று அறிந்த போது. ஆம், அந்த அழைப்பு மிதிலாவின் தந்தை ஆனந்தனிடம் இருந்து வந்தது.
"நான் ஆனந்தன்... மிதிலாவுடைய அப்பா பேசுறேன்"
"யா... சொல்லுங்க"
"உங்களை நான் சந்திச்சி பேசணும். முடியுமா?"
"ஓ... தாராளமா பேசலாம்"
"எப்போ, எங்கே, நான் உங்களை சந்திக்க முடியும்?"
"எப்ப வேணும்னாலும்... எங்க வேணும்னாலும்... இன்னைக்கு ஆஃபீஸ்க்கு வாங்களேன்..."
"நிச்சயம் வரேன்"
"வாங்க"
அழைப்பு துண்டிக்கப்பட்டது. ஸ்ரீராம் சிந்தனையில் ஆழ்ந்தான். தனது மகள் திருமணம் செய்து கொள்ளப் போகும் நபரை, அவளது அப்பா சந்திக்க விரும்புவது ஒன்றும் புதிதல்ல. ஆனால், இது வெறும் சாதாரண சந்திப்பாக மட்டும் இருக்கும் என்று ஸ்ரீராம் கருதவில்லை. ஒருவேளை, இது மிதிலாவின் கடந்த காலம் பற்றி கூற விரும்பும் சந்திப்பாகவும் இருக்கலாம். எதுவாக வேண்டுமானாலும் இருக்கட்டும். தனது வருங்கால மாமனாரை சந்திக்க தயாரானான் ஸ்ரீராம். சிற்றுண்டியை முடித்துக் கொண்டு அலுவலகம் புறப்பட்டு சென்றான்.
எஸ் ஆர் ஃபேஷன்ஸ்
ஸ்ரீராம் அலுவலகத்தில் நுழையும் போதே, தனது அறையில் பணியைத் தொடங்கி விட்டிருந்தாள் மிதிலா. ஒரு நொடி யோசித்தவன், நேராய் அவள் அறையை நோக்கி நடந்தான். அவனைப் பார்த்தவுடன் எழுந்து நின்றாள் மிதிலா. அவள் இயல்பாய் இருந்தாள் என்று நம்மால் கூற முடியவில்லை. ஆனால், அவள் இயல்பாய் இருப்பது போல் காட்டிக் கொள்ள முயன்றது தெள்ளத் தெளிவாய் தெரிந்தது.
"குட் மார்னிங் சார்" என்றாள் வழக்கம் போல்.
"நீங்க என்னை கல்யாணம் பண்ணிக்க ஒத்துக்கிட்டீங்கன்னு அக்கா சொன்னாங்க"
YOU ARE READING
என்னை ஏதோ செய்து விட்டாள்...! ( முடிவுற்றது)✔️
Romanceஅவர்கள் பணத்தாலும் தகுதியாலும் நேர் எதிரான வித்தியாசம் கொண்டவர்கள். அவனுடைய கவனம் முழுவதும் பணத்தின் மீதும் கௌரவத்தின் மீதும் மட்டுமே... ஆனால் அவளோ, வாழ்க்கையின் சிறுசிறு சந்தோஷங்களிலும் நனைந்து திளைப்பவள்... அதீதமான கடவுள் நம்பிக்கை கொண்டவள்... மித...