41 அதிரடி முடிவு
தனது அலுவலகத்தின் தொலை தொடர்பாளரை, தன் கைப்பேசி மூலம் அழைத்தபடி தனது அறையிலிருந்து கீழ் தளம் நோக்கி நடந்தான் ஸ்ரீராம்.
"இன்னைக்கு நம்ம ஆஃபீஸுக்கு வந்த எல்லா இன்கம்மிங் கால் லிஸ்ட்டோட பிரிண்ட் அவுட் எனக்கு வேணும்" என்று ஆணையிட்டான்.
"இதோ இப்ப எடுத்துக் கொடுக்கிறேன் சார்"
அது ஸ்ரீராமிடமிருந்து வந்த உத்தரவு என்பதால், துரிதமாய் செயல்பட்டார் தொலைத் தொடர்பாளர்.
நேராக பரத்தின் அறைக்குச் சென்றான் ஸ்ரீராம்.
"பரத், என்னோட கிளம்பி வா"
"அண்ணா, இப்ப தான் நீங்க அனுப்புன ஸ்டேட்மென்ட்டை பார்க்க ஆரம்பிச்சேன்"
"அதை அப்படியே விட்டுட்டு என் கூட வா" என்று ஆணையிட்டான்.
அவனது குரலைக் கேட்டு தனது அறையில் இருந்து வெளியே வந்த லக்ஷ்மன்,
"என்ன ஆச்சி ராமு?" என்றான்.
"நீயும் என் கூட கிளம்பு"
"நானுமா?"
"நீயும் தான்"
பரத்தும், லட்சுமணனும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டு ஸ்ரீராமை பின்தொடர்ந்தார்கள். அப்பொழுது, ஸ்ரீராம் கேட்ட ப்ரிண்ட்அவுட்டுடன் அங்கு ஓடி வந்தார் தொலைத் தொடர்பாளர். நடந்துகொண்டே அதை அவர் கையிலிருந்து வாங்கிக் கொண்டு வெளியே வந்தான் ஸ்ரீராம்.
அவர்கள் மூவரும் வேகமாய் வெளியே செல்வதை பார்த்து நின்றாள் மிதிலா. ஸ்ரீராமை பின்தொடர்ந்து தரைதளம் வந்த குகனும் அவர்களைப் பார்த்துக் கொண்டு நின்றான்.
"அவங்க மூணு பேரும் எதுக்காக ஆஃபீஸை விட்டு போறாங்க குகா? ஏதாவது பிரச்சனையா?" என்றாள் மிதிலா.
"ஆமாம், அவங்க மூணு பேரும் வீட்டுக்கு போறாங்க"
"ஒன்னும் பிரச்சனை இல்லையே?"
"அதை எஸ்ஆர்கே திரும்பி வந்ததுக்கு பிறகு தான் சொல்ல முடியும்"
YOU ARE READING
என்னை ஏதோ செய்து விட்டாள்...! ( முடிவுற்றது)✔️
Romanceஅவர்கள் பணத்தாலும் தகுதியாலும் நேர் எதிரான வித்தியாசம் கொண்டவர்கள். அவனுடைய கவனம் முழுவதும் பணத்தின் மீதும் கௌரவத்தின் மீதும் மட்டுமே... ஆனால் அவளோ, வாழ்க்கையின் சிறுசிறு சந்தோஷங்களிலும் நனைந்து திளைப்பவள்... அதீதமான கடவுள் நம்பிக்கை கொண்டவள்... மித...