42 யாராலும் முடியாதது...
சிந்தனை மேகங்களால் சூழப்பட்ட மனதுடன் தனது காரை வெகு வேகமாய் ஓட்டிக்கொண்டு சென்றான் ஸ்ரீராம். மிதிலா தன்னைப் பற்றி என்ன நினைத்துக் கொண்டிருக்கிறாளோ என்ற பதட்டம் அவனை கொன்று தின்றது. என்ன செய்ய வேண்டும் என்பதை அவன் ஏற்கனவே தீர்மானித்து விட்டிருந்தான். அதை செயல்படுத்த வேண்டுமானால், மிதிலா அலுவலகத்தை விட்டு கிளம்பும் முன் அவன் அவளை சந்தித்தாக வேண்டும். இந்த பிரச்சனை உடனடியாக முடிக்கப்பட வேண்டும். இதை மனதில் வைத்துக் கொண்டு, மிதிலா ஒரு நாள் கூட கவலைப் படக்கூடாது என்று நினைத்தான் ஸ்ரீராம்.
இதற்கியிடையில்...
எஸ் ஆர் ஃபேஷன்ஸ்
குகனின் அறைக்கு வந்த மிதிலா, அவனது அறையின் கதவை தட்டினாள். அவளைப் பார்த்துப் புன்னகைத்தான் குகன்.
"எங்க அக்காவுடைய வளைகாப்புக்கு நீங்க வரணும், குகா" என்று அவனுக்கு அழைப்பு விடுத்தாள் மிதிலா.
"ஓ... எப்போ?"
"நாளைக்கு சாயங்காலம்"
"கண்டிப்பா வரேன்"
"கரெக்ட் டைமுக்கு வந்துடுங்க"
"இதைப் பத்தி நீங்க ஒண்ணுமே சொல்லலையே?"
"மறந்துட்டேன்..."
"மறந்துட்டீங்களா? இல்ல வேற விஷயத்தினால டென்ஷனா இருந்தீங்களா?"
தன் கண்களை சுழற்றினாள் மிதிலா.
"கவலைப்படாதீங்க. எஸ்ஆர்கே இந்த விஷயத்தை சீக்கிரமாவே முடிவுக்குக் கொண்டு வருவான்"
"பார்க்கலாம்..."
"அவன் என்ன செய்யப் போறான்னு பார்க்க ரொம்ப ஆவலா இருக்கீங்க போல இருக்கு...?"
"போதும் நிறுத்துங்க, குகா"
"ஓகே, கூல்... வேற யாரை எல்லாம் இன்வைட் பண்ணி இருக்கீங்க?"
"லக்கியையும், சௌமியாவையும்..."
"எஸ்ஆர்கே வை கூப்பிடலையா?" என்றான் கிண்டலாக.
YOU ARE READING
என்னை ஏதோ செய்து விட்டாள்...! ( முடிவுற்றது)✔️
Romanceஅவர்கள் பணத்தாலும் தகுதியாலும் நேர் எதிரான வித்தியாசம் கொண்டவர்கள். அவனுடைய கவனம் முழுவதும் பணத்தின் மீதும் கௌரவத்தின் மீதும் மட்டுமே... ஆனால் அவளோ, வாழ்க்கையின் சிறுசிறு சந்தோஷங்களிலும் நனைந்து திளைப்பவள்... அதீதமான கடவுள் நம்பிக்கை கொண்டவள்... மித...