44 இன்ப அதிர்ச்சி...

2.1K 103 13
                                    

44 இன்ப அதிர்ச்சி...

தன் வீட்டு வாசலில் நின்றிருந்த தனது பாஸை பார்த்த மிதிலா, செய்வதறியாது திகைத்தாள். அவன் உண்மையிலேயே வந்திருக்கிறான் என்பதை அவளால் நம்ப முடியவில்லை. வீட்டின் உள்ளே நுழையாமல் இங்கும் அங்கும் யாரையோ தேடினான் ஸ்ரீராம். தன்னை அதிர்ச்சியுடன் பார்த்துக் கொண்டிருந்த, அந்த நபரின் மீது அவனது பார்வை விழுந்தவுடன், அவனது விழிகள் நகர மறுத்தன. மிதிலாவை சுற்றி இருந்த மற்ற அனைத்தும் மங்கி போனது. அந்த விசேஷ வீட்டின் இறைச்சல் கூட அவன் காதுகளுக்கு எட்டவில்லை. குகன் கூறிய வார்த்தைகள் எந்த அளவுக்கு உண்மை என்று நிரூபித்து, மிதிலாவை பார்த்து கல்லாய் சமைந்து நின்றான் ஸ்ரீராம்.

தனது உறுதியைக் குலைத்த  ஸ்ரீராமின் குத்தீட்டி பார்வையை எதிர்கொள்ள முடியாமல் திணறினாள் மிதிலா. அவளுக்கு என்ன செய்வது என்று புரியவில்லை. அவன் இங்கு எப்படி வந்தான்? அவனுக்கு இந்த விசேஷம் பற்றி எப்படி தெரிந்தது?

"நான் சொல்லல? பாருங்க, தன்னோட பார்வையாலேயே அவன் எப்படி உங்களை முழுங்கிகிட்டு இருக்கான்னு..." என்று சிரித்தான் குகன்.

யாரோ தன் தோளை தொட, வானத்திலிருந்து பூமிக்கு வந்தான் ஸ்ரீராம். அவனை நம்பமுடியாமல் பார்த்தார் ஆனந்தன்.

"ஸ்ரீராம்... என்ன ஒரு ப்ளஸன்ட் சர்ப்ரைஸ்...! நீங்க வருவீங்கன்னு எனக்கு தெரியாது. உங்களை கூப்பிட்டிருக்கிறதா மிதிலா சொல்லவே இல்லையே..."

"நான் அத்தைக்காக வந்தேன்..."

அது அவரை மேலும் ஆச்சரியப்படுத்தியது. ஏனென்றால், சாந்தாவும் இதைப் பற்றி அவரிடம் ஒன்றும் கூறியிருக்கவில்லை.

"உங்களை சாந்தாவா கூப்பிட்டா?"

"அவங்க எங்க ஃபேமிலி லேடிஸை கூப்பிடணும்னு ஃபோன் பண்ணாங்க. அவங்க யாரும் வீட்ல இல்ல. அதனால, அவங்க சார்பா நான் வந்தேன்"

"ரொம்ப, ரொம்ப சந்தோஷம்"

ஆனந்தன் சாந்தாவை தேடினார். அவரோ வந்திருந்த விருந்தாளியிடம் பேசிக்கொண்டிருந்தார்.

என்னை ஏதோ செய்து விட்டாள்...! ( முடிவுற்றது)✔️Where stories live. Discover now