45 அன்புச் சங்கிலி...
ஆனந்த குடில்
"நான் கிளம்புறேன்" என்றான் ஸ்ரீராம், மிதிலாவின் பெற்றோரிடம்.
"நீங்க இங்க வந்தது எங்களுக்கு ரொம்ப சந்தோஷம். ரொம்ப நன்றி" என்றார் சாந்தா.
"சீக்கிரமே பூ முடிக்க உங்க வீட்டுக்கு வருவோம்" என்றான் ஸ்ரீராம், மிதிலாவை பார்த்தபடி.
"நாங்க உங்களுக்காக காத்திருப்போம்" என்றார் ஆனந்தன்.
"பை" மீண்டும் மிதிலாவை பார்த்து கூறிவிட்டு சென்றான் ஸ்ரீராம்.
விழாவுக்கு வந்திருந்த அனைவரும் ஒவ்வொருவராய் கிளம்பிச் சென்றார்கள், மிதிலாவின் தோழி அருணா ஒருத்தியைத் தவிர. அன்று மிதிலாவுடன் அங்கேயே தங்குவது என்று அவள் தீர்மானித்திருந்தாள். தனது உடைகளை மாற்றிக் கொண்டு, தனது அறையை மீண்டும் பழைய நிலைக்கு திரும்பிக் கொண்டிருந்தாள் மிதிலா. தன் பார்வையை நகர்த்தாமல், மிதிலாவையே பார்த்துக்கொண்டு அமர்ந்திருந்தாள் அருணா. அதை உணர்ந்த மிதிலா, தன் புருவத்தை உயர்த்தி,
"என்ன?" என்றாள்.
"உன்னுடைய மேரேஜ் ப்ரொபோஸலை பத்தி என்கிட்ட சொல்லாம எப்படி நீ மறந்த?"என்று கேள்வி எழுப்பினாள்.
"நான் அதை சொல்ல மறக்கல, அருணா" என்று மென்று முழுங்கினாள்.
"இது தான் முதல் தடவை, நீ என்கிட்டயிருந்து ஒரு விஷயத்தை மறைக்கிறது. ஏன் மிதிலா? நீ ரொம்ப மதிக்கிற ஒருத்தரை தானே நீ கல்யாணம் பண்ணிக்க போற...? அதுக்காக நீ சந்தோஷமா தான் இருக்கணும்?"
அவள் அருகில் வந்தமர்ந்து,
"எனக்கு ரொம்ப பயமா இருக்கு, அரு..." என்றாள் மிதிலா.
"பயமா? ஏன்?"
அவளை வலி நிறைந்த பார்வை பார்த்தாள் மிதிலா. அதன் அர்த்தத்தை புரிந்து கொண்டாள் அருணா.
"மிதிலா, தயவு செய்து உன்னுடைய கடந்த காலத்தை கொண்டு வந்து இதுல சேர்க்காத..."
"நான் எப்படி இதை அவர்கிட்டயிருந்து மறைக்கிறது?"
"வேற வழி இல்ல, மிதிலா. தயவு செய்து இந்த நல்ல சம்பந்தத்தை கெடுத்துடாத. ஒரு நல்ல மனுஷனை மிஸ் பண்ணிடாத..."
YOU ARE READING
என்னை ஏதோ செய்து விட்டாள்...! ( முடிவுற்றது)✔️
Romanceஅவர்கள் பணத்தாலும் தகுதியாலும் நேர் எதிரான வித்தியாசம் கொண்டவர்கள். அவனுடைய கவனம் முழுவதும் பணத்தின் மீதும் கௌரவத்தின் மீதும் மட்டுமே... ஆனால் அவளோ, வாழ்க்கையின் சிறுசிறு சந்தோஷங்களிலும் நனைந்து திளைப்பவள்... அதீதமான கடவுள் நம்பிக்கை கொண்டவள்... மித...