50 விசித்திர உணர்வு
நர்மதா கூறியது போலவே மிதிலாவின் கையில் மருதாணி வரைய, அவளது வீட்டுக்கு வந்தார் அழகு கலை நிபுணர். நர்மதா கொடுத்து அனுப்பியிருந்த டிசைனை, அவர் மிதிலாவிடம் காட்டினார். அது மிதிலாவுக்கு மிகவும் பிடித்திருந்தது. அதன் மத்தியில் ஸ்ரீராமின் பெயர் எழுதப்பட்டிருந்தது. அவனது பெயர் பார்ப்பதற்கு ஒரு டிசைனை போலவே இருந்த போதிலும், ஸ்ரீராமின் பெயர் தெள்ளத் தெளிவாய் தெரிந்தது.
ஒரு விஷயத்தை நினைக்கும் பொழுது தான் அவளுக்கு வயிற்றைக் கலக்கியது. அவளது கையில் தனது பெயரைப் பார்க்கும் பொழுது ஸ்ரீராம் என்ன செய்வான்? நாளை, தினேஷ், நர்மதாவின் திருமண நாள். அவள் பூவனத்திற்கு செல்ல வேண்டும். அவளது நண்பர்களும், உறவினர்களும், ஸ்ரீராமின் முன் இதை வைத்து அவளை கிண்டல் கேலி செய்யாமல் இருக்க வேண்டும். அவள் நாளை மாலை பூவனம் செல்வதைப் பற்றி யோசித்தாளே தவிர, நாளை அலுவலகத்தில் ஸ்ரீராமை எதிர்கொள்ள வேண்டும் என்பது அவள் நினைவுக்கு வரவில்லை.அவள் கையில் வரையப்பட்டிருந்த மருதாணி காயும் வரை தூங்காமல் விழித்திருந்தாள். அந்த மருதாணி கலைந்து விடக்கூடாது என்பதற்காக அல்ல. ஸ்ரீராமின் பெயர் கலைந்து விடக்கூடாது என்பதற்காக. தன் கையில் இருந்த அவனது பெயரை பார்த்து சிரித்தபடி அமர்ந்திருந்தாள் மிதிலா.
பூவனம்
தன் கையிலிருந்த மருதாணியை சந்தோஷமாய் பார்த்துக் கொண்டிருந்தார் புஷ்பா.
"பார்த்தியா லயா, என்னோட கையில எவ்வளவு செகப்பா மருதாணி பிடிச்சிருக்கு..."
விதியே என்று சிரித்தாள் லயா.
"எதனால என்னோட மருதாணி இப்படி செவந்திருக்கு தெரியுமா? என்னோட வீட்டுக்காரர் என்னை ரொம்ப காதலிக்கிறார்" என்றார் பெருமையுடன்.
தன் கண்களை சுழற்றினாள் லயா. புஷ்பா உறங்கட்டும் என்று அவள் காத்திருந்தாள். சிறிது நேரமாவது நிம்மதியாக இருக்க வேண்டும் என்று நினைத்தாள் அவள். இப்படி, அப்படி திரும்பாமல் கட்டிலில் படுத்திருப்பது என்பது கொடுமை.
YOU ARE READING
என்னை ஏதோ செய்து விட்டாள்...! ( முடிவுற்றது)✔️
Romanceஅவர்கள் பணத்தாலும் தகுதியாலும் நேர் எதிரான வித்தியாசம் கொண்டவர்கள். அவனுடைய கவனம் முழுவதும் பணத்தின் மீதும் கௌரவத்தின் மீதும் மட்டுமே... ஆனால் அவளோ, வாழ்க்கையின் சிறுசிறு சந்தோஷங்களிலும் நனைந்து திளைப்பவள்... அதீதமான கடவுள் நம்பிக்கை கொண்டவள்... மித...