53 முதலிரவு

2.3K 101 12
                                    

53 முதலிரவு

கிஸ் ப்ரூஃப் லிப்ஸ்டிக்கை, தனக்கு பின்னால் மறைத்துக் கொண்டாள் மிதிலா.

"நான் ஏற்கனவே அதைப் பார்த்துட்டேன்" என்று சிரித்தாள் அருணா.

முகத்தை உம்மென்று வைத்துக்கொண்டு, அதை கட்டிலின் மீது வைத்தாள் மிதிலா.

"யாரோ ரொம்ப ஆர்வமா காத்திருக்காங்க போல தெரியுது..." என்று கட்டிலில் விழுந்து உருண்டு உருண்டு சிரித்தாள் அருணா.

அவளைப் பட்டென்று ஒரு அடி போட்டு,

"வாயை மூடு" என்றாள் மிதிலா.

"நீ வேணா பாரு, ரூமுக்குள்ள போன உடனே உன் மேல பாய போறாரு. அதைத் தான், இந்த கிஸ் ப்ரூஃப் லிப்ஸ்டிக் மூலமா சிம்பாலிக்கா சார் சொல்லி இருக்காரு..." என்றாள் கேலியாக.

"பொண்ணோட விருப்பம் இல்லாம யாரும் அப்படியெல்லாம் செய்ய மாட்டாங்க"

"விருப்பம் இல்லாம, யாரும் கல்யாணத்துக்கு சம்மதம்னு சொல்ல மாட்டாங்க... உன்னோட கதையை எங்கிட்ட அவுத்துவிடாதே"

"ஆனா, எனக்கு விருப்பம் இருக்குன்னு அவருக்கு தெரியாதே... அவர் என்னை கட்டாயப்படுத்தினதால தான் நான் அவரை கல்யாணம் பண்ணிக்கிறேன்னு தானே அவர் நினைச்சிக்கிட்டு இருக்காரு..."

"இருக்கலாம்... கல்யாணத்துக்கு சரின்னு சொல்லிட்டா, மத்த எல்லாத்துக்குமே சரின்னு தானே அர்த்தம்?"

அவளுக்கு பதில் கூறாமல் கிஸ் ப்ரூஃப் லிப்ஸ்டிக்கையே பார்த்துக் கொண்டிருந்தாள் மிதிலா.

"பைத்தியக்காரத்தனமா இருக்காத... உனக்கும் அவரை பிடிச்சிருக்கு. அதை அவர்கிட்ட சொல்லிடு. அப்படியே நீ சொல்லலனாலும், அவர் உன்னை தொடணும் நினைச்சிட்டா, யார் அவரை தடுக்க முடியும்?"

அதிர்ச்சியுடன் அவளைப் பார்த்தாள் மிதிலா.

"பின்ன என்ன? தூரத்தில வெச்சு அழகு பார்க்கவா அவரு உன்னை கல்யாணம் பண்ணிக்கிறாரு? அவர் என்ன முனிவரா?"

"அவரு முனிவரா இருந்தா என்னை ஏன் கல்யாணம் பண்ணிக்க போறாரு?" என்றாள் பெருமூச்சுவிட்டபடி.

என்னை ஏதோ செய்து விட்டாள்...! ( முடிவுற்றது)✔️Where stories live. Discover now